செல்ஃபி எடுப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை

செல்ஃபி எடுப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை

1 mins read
f7fd6ebd-4ae7-41f5-bf4b-e8e56da55535
சென்னை: ரயில்வே விதி­மு­றை­களை மீறும் வகை­யில், ரயில் தண்­ட­வா­ளத்­தில் நின்­று­கொண்டு செல்ஃபி எடுப்­பது, ரயில்வே பாதை­யைக் கடப்­பது உள்­ளிட்ட செயல்­களில் ஈடு­படுவோருக்கு ஆறு மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும். படம்: பிக்ஸாபே -

சென்னை: ரயில்வே விதி­மு­றை­களை மீறும் வகை­யில், ரயில் தண்­ட­வா­ளத்­தில் நின்­று­கொண்டு செல்ஃபி எடுப்­பது, ரயில்வே பாதை­யைக் கடப்­பது உள்­ளிட்ட செயல்­களில் ஈடு­படுவோருக்கு ஆறு மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என தெற்கு ரயில்வே எச்­ச­ரித்­துள்­ளது.

இது­கு­றித்து தெற்கு ரயில்­வே­யின் சென்னை கோட்­டம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ரயில்வே விதி­க­ளின்­படி கைப்­பே­சி­யில் பேசி­ய­படி ரயில் பாதை­யைக் கடப்­பது, ரயி­லின் படி­களில் நின்­ற­படி பய­ணம் செய்­வது, புகைப்­ப­டம், செல்ஃபி எடுக்கக் கூடாது. இதனை மீறுவோர் மீது ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

ரயில் பாதையைக் குறுக்கு வழி­யில் கடக்க நினைக்­கா­மல், சுரங்­கப்­பாதை அல்­லது மேம்­பா­லங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும். பாது­காப்பு விதிகளை மீறு­வோ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது ரூ.1,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும் என ரயில்வே நிர்வாகத் தினர் எச்சரித்துள்ளனர்.