மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: நீதிபதி கருத்துக்கு வரவேற்பு

மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: நீதிபதி கருத்துக்கு வரவேற்பு

2 mins read
99815370-aba6-41b2-8dfd-65cd7cdf2e95
-

சென்னை: இந்­தி­யா­வில் உள்ள அனைத்து மக்­க­ளுக்­கும் புரி­யும் வகை­யில் அந்­தந்த மாநில மொழி­க­ளி­லும் உச்ச நீதி­மன்­றத் தீா்ப்பு­கள் வெளி­யி­டப்­பட வேண்டும் என்று அண்­மை­யில் மும்பையில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்­றில் உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

இத­னைப் பிர­த­மர் நரேந்­திர மோடி வர­வேற்று பாராட்­டி­யி­ருந்த நிலை­யில், முதல்­வர் மு.க.ஸ்டா லின், இதர அர­சி­யல் கட்­சித் தலைவர்­களும் வர­வேற்று கருத்து­களைப் பகிர்ந்­துள்­ள­னர்.

முதல்வா் ஸ்டா­லின் தன் டுவிட்­டர் பதி­வில், "உச்ச நீதி­மன்­றத் தீா்ப்பு­கள் அனைத்து இந்­திய மொழி­க­ளி­லும் மொழிபெயர்க்­கப்­பட வேண்­டும். அதற்கு, தொழில்­நுட்ப வசதியைப் பயன்­ப­டுத்­திக்கொள்ளலாம் எனக் கூறிய தலைமை நீதி­ப­தியின் கருத்தை முழுமன­துடன் வர­வேற்­கி­றேன்.

"அதே­வே­ளை­யில், உயர் நீதி மன்­றங்­களில் மாநில அலு­வல் மொழி­களை வழக்­காடு மொழி யாக்க வேண்­டும் என்ற கோரிக் கையும் நீண்ட நாளாக இருந்து வரு­கிறது. இதனை நிறை­வேற்­றி­னால் நாட்­டில் உள்ள சாமா­னிய மக்­க­ளுக்­கும் நீதி எளி­தில் கிட்­டும்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம்: தலைமை நீதிபதி­யின் அறி­விப்பை வர­வேற்கிறேன். சென்னை உயர் நீதிமன்­றத்­தின் வழக்­காடு மொழி­யாக தமிழ் மொழியை அறி­விக்க வேண்­டும்.

பாமக நிறு­வ­னர் ராம­தாஸ்: உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பு­களை மாநில மொழி­களில் வெளி­யிட வேண்­டும். சென்னை உயர் நீதி­மன்ற அலு­வல் மொழியாக தமிழை அறி­விக்கவேண்­டும்.

தமாகா தலை­வர் ஜி.கே.வாசன்: இந்­தி­யா­வில் ஏரா­ள­மான மொழி­கள் உள்­ளன. உச்ச நீதிமன்­றத் தீர்ப்­பு­களை சாமா­னிய மக்­களும் புரிந்­து­கொள்ள அவ­ர­வர் சார்ந்த மொழி­யி­லும் தீர்ப்பு வெளி­யி­டப்­பட வேண்­டும்.

மநீம தலை­வர் கமல்­ஹா­சன்: மாநில மொழி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நடை­மு­றையை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்த வேண்­டும் என டுவிட்டரில் தெரி­வித்­துள்ளார்.