குடியரசு தின விழா: ஐந்தடுக்கு பாதுகாப்பு; வானூர்தி பறக்க தடை

குடியரசு தின விழா: ஐந்தடுக்கு பாதுகாப்பு; வானூர்தி பறக்க தடை

1 mins read
1f554d92-4bff-4311-b0b8-49fd0bd9601e
-

சென்னை: குடி­ய­ரசு தின விழா நாளை 26ஆம் தேதி இந்­தியா முழு­வ­தும் கோலாக­ல­மா­கக் கொண் டாடப்­பட உள்­ளது. இதை­யொட்டி தமி­ழ­கம் எங்­கும் பாது­காப்பு அதிகரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், ஆளில்லா வானூர்தி கள் பறக்­க­வும் தடை விதிக்கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா உழைப்­பா­ளர் சிலை அருகே தேசி­யக் கொடி ஏற்றி சிறப்­பிக்க உள்­ளார்.

இந்நிலையில், சென்­னை­யில் உள்ள காம­ரா­ஜர் சாலை­யி­லும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லும் ஐந்தடுக்­குப் பாது­காப்பு போடப்­பட்டுள்­ளது.

இது­தொ­டர்­பாக சென்னை மாந­க­ரக் காவல்­துறை வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யில், குடி­யரசு விழா­வை­யொட்டி நக­ரில் உள்ள உணவகங்கள், தங்­கு விடு­தி­களில் காவலர்கள் திடீா் சோதனை நடத்தி வரு­கின்­றனா்.

சென்னை விமா­ன­நி­லை­யம், ரயில், பேருந்து நிலை­யங்­கள், வணிக வளா­கங்­கள், கடற்­கரைப் பகு­தி­கள், அனைத்து வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் கூடு­த­லாக காவலர்கள் நிய­மிக்­கப்­பட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்­து­றைத் தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு உத்­த­ர­வின்­படி, மாநி­லத்தில் 120,000 காவலர்களும் சென்­னை­யில் 10,000 காவ லர்களும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டு உள்­ளனர்.