சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறி வித்துள்ளார்.
"கூடிய விரைவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய ஓபிஎஸ், "அதிமுக போட்டியிடுவது உறுதி. ஆனால், எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காது," என்றார்.
"பழனிசாமி தாமாகவே முன் வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இப்ேபாதைய நிலையில் நான் மட்டுமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நீடித்து வருவதால் இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது," என ஓபிஎஸ் கூறினார்.
ஆனால், அதிமுக பிளவுபட்டு நிற்பதால் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தம்மைப் போட்டியிடுமாறு கட்சியினர் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கான பிர சாரத்தைத் திமுக கூட்டணி வேகப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் தொடர்ந்து ஆலோசனை மட்டுமே நடத்திக் கொண்டிருப்பதால் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள போட்டியைக் கைவிட்டு பிரசாரத்துக்குத் தயாராக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில், அதிகாரபூர்வ வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள் ளிட்டோர் பிரசாரத்தைத் தொடங்கியதை அடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுக அணி சார்பாக போட்டியிட்ட தமாகா, அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்ததை அடுத்து, அதிமுக போட்டியிடுவதாக அறிவித்து மற்ற சில தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இதனிடையே, "அதிமுக பல கூறுகளாக உடைந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியில் நிலவும் குழப்ப மான சூழல் எங்களுக்கு சாதக மாக அமைந்துள்ளது," என திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

