சென்னை: நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவிட மாட்டேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியின் செயல்பாடுகள் திமுகவுக்குச் சாதமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுக தொண்டர்களின் முடிவு தான் தன் முடிவு என்றும் கூறினார்.
இரட்டை இலைச் சின்னத்தை எக்காலத்திலும் யாரும் எதுவும் செய்யமுடியாது என்று கூறிய சசிகலா, ஓபிஎஸ் இபிஎஸ்சை இணைக்க முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
அதிமுக சிதறுண்டு இருப்பதற்கு பாஜக காரணம் அல்ல என்று விளக்கமளித்த அவர், "நாம் அடுத்தவரை குறை கூறத் தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியுமா? என் நிழலிடம் கூட யாரும் நெருங்க முடியாது," என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றாக இணையும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் பெட்டி யைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மு.க. ஸ்டாலின் பெற்ற கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதாகக் கருதுவ தாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

