நாற்காலி வர தாமதம்; தொண்டர்கள் மீது ஆவேசமாக கல் வீசிய அமைச்சர்; கண்டனம்

நாற்காலி வர தாமதம்; தொண்டர்கள் மீது ஆவேசமாக கல் வீசிய அமைச்சர்; கண்டனம்

1 mins read

திரு­வள்­ளூர்: அமர்­வ­தற்கு நாற்­காலிகளை எடுத்­து­வர தாம­த­மா­ன­தால் கோபம் அடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாற்­காலி எடுத்து வரச் சென்­ற­வர்­கள் மீது கற்­களை எடுத்து வீசி­னார். இந்­தக் காணொளி சமூகவலைத் தளங் களில் வேகமாகப் பர­வி­யது.

திரு­வள்­ளூர் அருகே உள்ள வேடங்கி­நல்­லூ­ரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் நாசர் பார்வையிடச் சென்றார்.

அப்போது, கட்சி நிர்­வா­கி­கள் அமர்வதற்கு அங்கு நாற்காலிகள் போடப்படாததால் தொண்­டர்­களிடம் அவர் ஆத்திரத்தை வெளிக்­காட்­டிய விதம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி உள்ளது.

நாற்­கா­லி­கள் எடுத்து வரு­வ­ தற்கு தாம­தமானதால் தொண்­டர்­கள் மீது அவர் கற்களை வீசுகிறார். நாசருடன் இருந்த திமுக பிரமுகர்கள் சிலர் பின்னணியில் சிரிப்பது காணொளியில் ஒலிக்கிறது.

இந்தக் காணொளியை தன் டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்ள தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, "இந்­திய வர­லாற்­றில் ஓர் அமைச்­சர் மக்­கள் மீது கல்­ எ­றி­வதை யாரா­வது பார்த்­தி­ருக்­கி­றார்­களா?" என கேள்வி எழுப்பி உள்­ளார்.

'திமு­க­வைச் சேர்ந்த அமைச்­சர் நாசர்தான் இப்­படிச் செய்­கி­றார். கொஞ்­சம் கூட நாக­ரிகம் இல்லை," என விமர்­சித்­துள்­ளார் அண்­ணா­மலை.

நாற்காலிகள் போடாத காரணத்துக்காக ஆத்திரம் அடைந்து ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.