சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா், கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகளின் அலுவலகங்களில் கட்டுமானப் பணி மேற்கொள்ளவும் முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும் கணினிமயமாக்கல், பேருந்து நிலைய விரிவாக்கம், மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் விடுதிகள் கட்டுதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளுக்குக் கோயில் நிதியைப் பயன்படுத்தக்கூடாது, அறநிலையத் துறை செலவுகளுக்குத் தொகுப்பு நிதியைப் பயன்படுத்தலாம் எனக் கூறினர். விசாரணை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

