திண்டுக்கல்: தமிழகத்தின் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குடமுழுக்கு விழா, உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது.
குடமுழுக்கு விழாவின் போது தீபாராதனைக்குப் பிறகு ராஜகோபுரம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்குச் சொந்தமான கலை, அறிவியல் பண்பாட்டுக் கல்லூரியின் திடலில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.