பல லட்சம் ஆண்டுகள் பழமையான கல் கருவிப் படிமங்கள் கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டுகள் பழமையான கல் கருவிப் படிமங்கள் கண்டுபிடிப்பு

1 mins read

அரி­ய­லூர்: அரி­ய­லூர் மாவட்­டம் வார­ண­வாசி பகு­தி­யில் ஏறத்­தாழ 15 லட்­சம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு கற்­கால மனி­தர்­கள் பயன்­ப­டுத்­திய கல் கரு­வி­கள் தொடர்­பான படி­மங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. திரு­வா­ரூர் மத்­திய பல்­கலைக்­க­ழக கல்­வெட்­டி­யல் துறை இத­னைத் தெரி­வித்­தது.

இக்­கல்­லூரி மாண­வர்­கள் 40 பேர், துறைப் பேரா­சி­ரி­யர் ரவி தலை­மை­யில் அண்­மை­யில் தொல்­பொ­ருள் படி­மங்­கள் குறித்த சேக­ரிப்­பில் ஈடு­பட்­ட­னர்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பேரா­சி­ரி­யர் ரவி, "அரி­ய­லூர் அரசு சிமென்ட் ஆலை பகு­தி­யில் சேக­ரிக்­கப்­பட்ட தொன்மை வாய்ந்த கற்­களில் கடல் நட்­சத்­திர மீன்­கள் இருந்­த­தற்­கான தட­யங்­கள் கிடைத்­தன. 2,000 ஆண்டுக­ளுக்குமுன் மனி­தர்­கள் இரும்பை உருக்­கிப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கான இரும்­புக் கச­டு­கள் கிடைத்­தன. அந்­தப் பகுதி கடற்­கரை­யாக இருந்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களும் கிடைத்­துள்­ளன," என்­றார்.