பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகள் பிடிபட்டன

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்காலச் சிலைகள் பிடிபட்டன

1 mins read
b63d9bad-cfbe-4752-bd41-4847c6eebe59
-

சென்னை: சென்னை ராஜா அண்­ணா­ம­லை­பு­ரம் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் ஷோபா துரை­ரா­ஜ­னின் வீட்­டில் பல கோடி ரூபாய் மதிப்­புள்ள பழங்­கால ஐம்­பொன் சிலை­கள் பிடி­பட்­டுள்­ளன.

சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்டு இருப்­ப­தா­கக் கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில், சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரி­வி­னர் சோதனை மேற்­கொண்­ட­னர்.

இதில், ஷோபா துரை­ரா­ஜன் வீட்­டில் 10 பழங்­கா­லச் சிலை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அந்­தச் சிலை­கள் சுமார் 400 ஆண்­டு­கள் பழ­மை­யா­னவை. அனைத்­தும் ஐம்­பொன் சிலை­கள். அவற்­றின் மதிப்பு கோடி ரூபாய் எனக் கூறப்­பட்­டது.

விசா­ர­ணை­யில், சிலை­களை மறைந்த சிலை கடத்­தல்­கா­ரர் தீன­த­யா­ள­னி­டம் இருந்து வாங்­கி­ய­தா­கக் கூறி­னார் ஷோபா.

சிலை­களை விற்­பனை செய்­வது தனது நோக்­கம் இல்லை என்று கூறிய அவ­ரி­டம் சிலை­களை வாங்­கி­ய­தற்­கான முறை­யான ஆவ­ணங்­கள் இருந்­தன. இத­னால் அவர்­மீது தற்­போது வழக்கு எது­வும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று காவல்­துறை கூறி­யது.

ஆனால் பழ­மை­யான சிலை­கள் என்­ப­தால், அவற்றை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இந்தச் சிலை­கள் எங்­கி­ருந்து திரு­டப்­பட்­டன என்­பது குறித்துக் காவல்­துறை விசா­ரணை நடத்தி­வ­ரு­கிறது.