பிபிசி ஆவணப்படத்துக்கு சென்னை பல்கலையில் தடை

பிபிசி ஆவணப்படத்துக்கு சென்னை பல்கலையில் தடை

2 mins read
3193e5ff-e366-4d13-ae5a-f8c59bfb1b41
-

திரையிட முயன்ற மாணவர்கள், கைப்பேசியில் பார்த்த பெண் கவுன்சிலர் கைது

சென்னை: பிர­த­மர் நரேந்­திர மோடி தொடர்­பாக பிபிசி ஊட­கம் வெளி­யிட்ட ஆவ­ணப் படத்தை திரை­யிட சென்னை பல்­க­லைக்­க­ழ­கம் தடை விதித்­துள்­ளது. எனி­னும் தடையை மீறி பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் ஆவ­ணப் படத்தை திரை­யிட மாண­வர்­கள் முயற்சி மேற்­கொண்­ட­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

குஜ­ராத்­தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கல­வ­ரத்தை அடிப்­ப­டை­யாக வைத்து பிபிசி ஊட­கம் ஆவ­ணப் படத்தை வெளி­யிட்­டுள்­ளது. அதில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­களை மறுத்­துள்ள மத்­திய அரசு, ஆவ­ணப் படத்­துக்கு தடை­யும் விதித்­தது.

எனி­னும் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் இந்­தத் தடை மீறப்­பட்டு வரு­கிறது.

டெல்­லி­யில் உள்ள ஜேஎன்யு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆவ­ணப் படத்தை திரை­யி­டு­வது தொடர்­பாக மாண­வர்­கள் இடையே மோதல் வெடித்­துள்­ளது. ஆவணப் படத்தை தங்­க­ளு­டைய கைப்­பேசி­களில் பார்க்க முயன்­ற­வர்­கள் மீது கல்­வீச்சு நடந்­தது.

சில மாண­வர்­கள் காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பல்­கலை வளா­கத்­தில் பதற்­றம் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று பிற்­ப­க­லில் சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பிபிசி ஆவ­ணப்­ப­டம் திரை­யி­டப்­ப­டு­வ­தாக அறி­விப்பு வெளி­யா­னது. இதை அறிந்த பல்­கலை நிர்­வா­கம் அத்­தி­ரை­யி­ட­லுக்கு அனு­மதி மறுத்­தது.

எனி­னும் தடையை மீறி மாண­வர்­கள் சிலர் ஆவ­ணப் படத்தை பல்­கலை வளா­கத்­தில் திரை­யிட்­ட­னர்.

முன்­ன­தாக, திரு­வா­ரூர் மத்­திய தமிழ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இந்­திய மாண­வர் சங்­கத்­தி­னர் ஏற்­பாட்­டில் பிபிசி ஆவ­ணப்­ப­டம் திரை­யி­டப்­பட்­டது. இது­கு­றித்து காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

சென்­னை­யில் மாநிலக் கல்­லூரி விடு­தி­யி­லும் பச்­சை­யப்­பன் கல்­லூரி, நந்­த­னம் அரசுக் கல்­லூரி, எம்.சி. ராஜா கல்­லூரி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் ஆவ­ணப் படத்தை வெளி­யிட மாண­வர்­கள் பலர் முயற்சி மேற்­கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, தடை செய்­யப்­பட்ட ஆவ­ணப் படத்தை தங்­கள் கைப்­பே­சி­களில் பார்த்த மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் கவுன்­சி­ல­ரும் இந்­திய ஜன­நா­யக வாலி­பர் சங்க உறுப்­பி­னர்­களும் சென்னை காவ­ல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த ஆவ­ணப்­ப­டத்தை தமி­ழ­கத்­தில் வீதி­தோ­றும் கொண்டு சேர்க்­கப் போவ­தாக இந்­திய ஜன­நா­யக வாலி­பர் சங்­கம் மீண்­டும் அறி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் இச்­சங்­கத்­தைச் சேர்ந்த பலர் சாலை­யோ­ரங்­களில் அமர்ந்து பிபிசி ஆவ­ணப் படத்­தைப் பார்த்­த­னர்.