பொதுக்குழு, இரட்டை இலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் அதிமுகவினர்

பொதுக்குழு, இரட்டை இலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு காத்திருக்கும் அதிமுகவினர்

2 mins read
Google News Preferred Icon

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தால் தங்­க­ளுக்கு அதி­மு­க­வின் அதி­கா­ர­பூர்வ இரட்டை இலைச் சின்­னத்தை ஒதுக்க வேண்­டும் என்­று கோரி முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு உச்ச நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை விசா­ரித்த உச்ச நீதி­மன்ற நீதி­பதி தினேஷ் மகேஸ்­வரி தலை­மை­யி­லான அமர்வு, ஜன­வரி 30ஆம் தேதி­யன்று மனுவைத் தாக்­கல் செய்­யும்­படி அறி­வு­றுத்­தி­யது.

மேலும், இடைத்­தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் முடிவடை­யும் முன்பு அதி­முக பொதுக்­குழு தொடர்­பான வழக்­கில் தீர்ப்பு வழங்க முயற்சி செய்­வ­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த ஆண்டு நடை­பெற்ற அதி­முக பொதுக்­குழு தொடர்­பான மேல்­மு­றை­யீட்டு மனுவை உச்ச நீதி­மன்­றம் விசா­ரித்து வந்­தது. இந்த வழக்­கில் தேதி குறிப்­பி­டப்­ப­டா­மல் தீர்ப்பு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் ஈரோடு கிழக்குத் தொகு­திக்­கான இடைத்­தேர்­தலை அறி­வித்­துள்­ளது தேர்­தல் ஆணை­யம்.

அதி­மு­க­வின் இரு அணி­கள் சார்­பா­க­வும் வேட்­பா­ளர்­கள் கள­மி­றக்­கப்­பட உள்­ள­னர். இது தொடர்­பாக தமது ஆத­ர­வா­ளர்­களு­டன் ஆலோ­சனை நடத்தி உள்­ளார் பழ­னி­சாமி. தனது அணி சார்­பில் வேட்­பா­ளர் அறி­விக்­கப்­ப­டு­வது உறுதி என ஓ.பன்னீர்­செல்­வ­மும் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

பொதுக்குழு வழக்கு தொடர்­பாக சட்ட வல்­லு­நர்­கள் வழங்கி­உள்ள ஆலோ­ச­னை­யின்­படி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றார் பழனிசாமி. இந்­நி­லை­யில், இரட்டை இலைச் சின்­னம் தொடர்­பாக இபி­எஸ் தரப்பு உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளது. எனி­னும் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை முறை­யி­டும்­படி உச்ச நீதி­மன்­றம் அறி­வு­றுத்தி உள்­ளது. இதற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

திங்­கட்­கி­ழமை தங்­க­ளு­டைய மனுவை அவ­சர வழக்­கா­கக் கருதி உச்ச நீதி­மன்­றம் விசா­ரிக்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக பழ­னி­சாமி தரப்பு கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே பொதுக்­குழு தொடர்­பான வழக்­கில் தீர்ப்பு வழங்க முயற்சி செய்­வ­தாக நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில் இடைத்­தேர்­தல் பணிக்­காக தேர்­தல் பணிக்­குழுவை அமைத்­துள்­ளார் பழ­னி­சாமி. இதில் முன்­னாள் அமைச்­சர் கே.ஏ.செங்­கோட்­டை­யன் தலை­மை­யில் 111 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர்.