காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை தமிழக அரசுதான் தேர்வு செய்தது என மத்திய விமானப் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் விகே சிங் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய விமான நிலையப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையத்துக்காக ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு கடந்த சில மாதங்களாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

