'மது விற்பவர்களுக்கு மட்டும்தான் விருதா? அருந்துபவர்களுக்கு இல்லையா என கேள்வி'

'மது விற்பவர்களுக்கு மட்டும்தான் விருதா? அருந்துபவர்களுக்கு இல்லையா என கேள்வி'

2 mins read

கரூர்: இம்­மா­தம் 26ஆம் தேதி குடி­ய­ரசு தின விழா கொண் டாடப்­பட்­டது. இதை­யொட்டி, ஒரு­பு­றம் சென்­னை­யில் கள்­ளச் சாராய ஒழிப்­பில் சிறப்­பா­கச் செயல்­பட்ட ஐந்து காவ­லர்­க­ளுக்கு காந்­தி­ய­டி­கள் விருதை முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வழங்­கி­னார்.

மற்­றொ­ரு­பு­றம் நடந்த விழா வில், அதிக அள­வில் மதுவை விற்­பனை செய்து வரு­வாய் ஈட்­டிய நான்கு பணி­யா­ளர்­க­ளுக்கு கரூர் மாவட்ட ஆட்­சி­யர் பிரபு சங்­கர் பாராட்­டுச் சான்­றி­தழ்­கள் வழங்­கி­னார்.

ஏன் இந்த முரண்­பாடு? தமிழ்­நாட்­டின் இலக்­கு­தான் என்ன என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார் பாமக தலை­வர் டாக்­டர் அன்­பு­மணி ராம­தாஸ்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், கள்­ளச் சாராய ஒழிப்பு, மது விற்­பனை அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்­றிற்கு விருது வழங்­கப்­பட்­டது குறித்து சமூக ஊட­கங்­களில் கடும் எதிர்ப்பு கிளம்பி யதை அடுத்து கரூர் நிர்­வா­கம் அதைத் திரும்­பப் பெற்­றுள்­ளது.

இந்­திய குடி­ய­ரசு நாளில், பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்­கு­வதற்­காக கரூர் மாவட்ட நிர்­வா­கம் கடைப்­பி­டித்­துள்ள அள­வீடு அதிர்ச்­சி­ய­ளிக்­கிறது.

'டாஸ்­மாக்' மதுக் கடை­களில் மது விற்­பனை செய்­த­வர்­க­ளுக்கு பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்­கப்­பட்­ட­தன் பின்­னணி குறித்து விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.

இத்­த­கைய மோச­மான சூழ­லில் இருந்து தமி­ழக மக்­க­ளைக் காக்க தமிழ்­நாட்­டில் மது­வி­லக்கை அமல்­ப­டுத்­து­வ­தாக அரசு அறி­விக்­க­வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

'டாஸ்­மாக்' கடை­யில் சிறப்­பாக சரக்கு விற்­ற­வ­ருக்கு குடி­ய­ரசு தினத்­தில் சிறப்பு விருது என்ற வாச­கத்­து­டன், வடி­வேலு படத்தைப் போட்டு 'விற்பவர்­க­ளுக்கு மட்­டும்­தானா? அதி­க­மாக குடிக்­கும் எங்­க­ளுக்கு எப்­போது ஐயா விருது கொடுப்­பீர்­கள்?' என 'மீம்ஸ்'கள் போட்டு கேலி செய்­த­தால், மாவட்ட மேலா­ளர், மேற்­பார்­வை­யா­ளர்­கள், விற்­ப­னை­யா­ளர்­கள் என ­நால்வருக்கு வழங்­கப்­பட்ட பாராட்­டுச் சான்­றி­தழ்­கள் (கேட­யம் திரும்­பப் பெறப்­ப­ட­வில்லை) மாவட்ட நிர்­வா­கத்­தால் திரும்­பப்­பெ­றப்­பட்­டன.