சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து நாளை 30ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக கடந்த இரண்டு நாள்களாக பழனிசாமி தரப்பினர் ஆேலா சனை நடத்தி வந்ததைத் ெதாடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசனை நடத்தியுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த பன்னீர்செல்வம் தரப்பினர், தாங்களே உண்மையான அதிமுகவினர் என்றும் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள் தரப்பு வெற்றிபெறும் என்றும் கூறினர்.
இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஓபிஎஸ் தரப்பு என்பது வெறும் நான்கு அல்லது ஐவர் கொண்ட குழுதான். அதனை அணி என்று சொல்ல முடியாது. நாளை இபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, இரட்டை இலைச் சின்னத்தில் தங்கள் அணி போட்டியிட்டு வெல்லும்," என்று கூறினார்.
"அதிமுகவில் பிரிவு, பிளவு என ஊடகங்கள்தான் மாயையை உருவாக்குகின்றன. எங்கள் அணியில் பிரிவும் இல்லை, பிளவும் இல்லை. பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையின்கீழ் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்," என்றார்.
இதனிடையே, இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை சாக்கடை என்று விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இப்போது ஏன் அதே சாக்கடையில் இறங்குகிறார் எனக் கேட்டுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். ஓபிஎஸ்-இபிஎஸ் இரு வரும் இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டி போட்டால் கிடைக்காது. இப்படித்தான் கடந்த 2017ல் சின்னம் முடக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

