கோவை: குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்தும் வகையில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக பயிற்சிப் பள்ளிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பழநி முருகன் கோவில் குட முழுக்கு விழா முடிந்தபின்னர், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழில் குட முழுக்கு நடத்த நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கும்படி அறிவுறுத்தி இருந்தது.
“அதன்படி குழு அமைக்கப் பட்டு, அவர்கள் அது சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் யோசனைப்படி குடமுழுக்கு விழாக்களைத் தமிழிலேயே நடத்துவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளிகள் விரைவில் தொடங்கப் படும்,” என்று கூறினார்.