மறு உத்தரவு வரும்வரை பணிகளை நிறுத்தும்படி சென்னை மாநகராட்சி உத்தரவு இடிக்கப்பட்ட கட்டடம் சரிந்து பெண் பலி; மூன்று பேர் கைது

மறு உத்தரவு வரும்வரை பணிகளை நிறுத்தும்படி சென்னை மாநகராட்சி உத்தரவு இடிக்கப்பட்ட கட்டடம் சரிந்து பெண் பலி; மூன்று பேர் கைது

2 mins read
222829c1-7ae8-4a6f-b573-b028ff4f4b54
-

சென்னை: சென்னை அண்ணா சாலை­யின் ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யில் இருந்த பழ­மை­யான கட்­ட­டத்தை இடிக்­கும் பணி­யின் போது ஏற்­பட்ட விபத்­தில் பத்ம பிரியா என்ற இளம்­பெண் உயிரி ழந்­தார்.

இச்சம்­ப­வத்­தைத் தொடர்ந்து, கட்­ட­டத்தை இடிக்­கும் பணியை உட­ன­டி­யாக நிறுத்­தும்­படி கட்­டட உரி­மை­யா­ள­ருக்­குச் சென்னை மாந­க­ராட்சி உத்­த­ர­விட்­டுள்­ளது.

அத்­து­டன், மறு உத்­த­ரவு வரும்­வரை அங்கு வேறு எந்த ஒரு பணி­யை­யும் மேற்­கொள்­ளக் கூடாது என­வும் நோட்­டீஸ் அளித்­துள்­ளது­.

"முன் அனு­மதி பெற்­றுத்­தான் கட்­ட­டத்தை இடித்­துள்­ள­னர். எனி­னும், பாது­காப்பு விதி­மு­றை­களை­யும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் முறை­யா­கப் பின்­பற்­றா­மல் கவ­னக்­கு­றை­வாக செயல்­பட்­டது தெரி­ய­வந்­துள்­ளது," என மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சென்னை ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யில் பழைய கட்­ட­டத்தை 'பொக்­லைன்' இயந்­தி­ரம் மூலம் இடித்­துக்­கொண்­டி­ருந்த போது, அந்­தக் கட்­ட­டம் மேலி­ருந்து சரிந்­த­தில் பக்­க­வாட்­டில் நடந்து சென்­று­கொண்­டி­ருந்த பத்­ம­பிரியா, 22, உயி­ரி­ழந்­தார்.

இதையடுத்து, இயந்திரத்தின் உரி­மை­யா­ளர் ஞான­சே­க­ரன், ஓட்­டு­நர் பாலாஜி, மேற்­பார்­வை­யா­ளர் பிரபு ஆகிய மூவ­ரை­யும் காவலர்கள் கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

தலை­ம­றை­வாக உள்ள கட்­டட உரி­மை­யா­ளர், பொறி­யா­ளர், ஒப்­பந்­த­தா­ரர் ஆகிய மூவ­ரை­யும் தேடி வரு­கின்­ற­னர்.

"பெண் பலி­யான சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்­தப்­படும்," என்று கூறி­யுள்ள சென்னை மேயர் பிரியா, இது­போன்ற விபத்­து­கள் இனியும் நடக்­கா­மல் மாந­க­ராட்சி உரிய நட­வ­டிக்கை எடுக்­கும் என்றார்.

மதுரை மாவட்­டம், உசி­லம்­பட்­டி­யைச் சோ்ந்த பாண்டி முரு­கே­சன் என்­ப­வ­ரின் மக­ளான பத்­ம­பி­ரியா, 22, எம்­சிஏ படித்­து­விட்டு விபத்து நிகழ்ந்த இடத்­தின் அருகே உள்ள ஒரு தனியாா் நிறு­வ­னத்­தில் கடந்த டிசம்பா் மாதம்­தான் மென்பொறி­யா­ள­ரா­கப் பணி­யில் சோ்ந்தி­ருந்­தார்.