ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி 250 காவல்துறையினரை உள்ளடக்கிய சுற்றுக்காவல் படை நேற்றுக் காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. உதவி ஆய்வாளர் தலைமையில் ஆறு காவலர்கள் அடங்கிய குழுக்கள் பிரிக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
கட்சிக் கொடிகளுடன் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கொடிகளைக் கழற்றிய பின்னரே மீண்டும் செல்ல அனுமதிக்கப்
படுகின்றன.
வாகனங்களில் கொடிகளையும் தேர்தல் சின்னங்களையும் பயன்படுத்த அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என காவல்
துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பொருள்கள் அல்லது பணம் கொண்டு செல்லப்படுகிறதா எனவும் வாகனங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன.

