2022ஆம் ஆண்டில் 165 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

2022ஆம் ஆண்டில் 165 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

2 mins read
50e9f1f2-acbc-43c1-974c-585cecb96e5e
மரண தன்­டனை விதிக்­கப்­பட்­டோ­ரில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்­கி­னர், பாலி­யல் குற்­றத்­திற்­கா­கத் தண்­டிக்­கப்­பட்­ட­வர்­கள் எனக் கூறப்­படுகிறது. படம்: பிக்ஸாபே -

புதுடெல்லி: இந்­தி­யா­வில் கடந்த இரு­பது ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சென்ற ஆண்டு 165 பேருக்குத் தூக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது. ஒப்­பு­நோக்க 2021ல் 146 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மரண தன்­டனை விதிக்­கப்­பட்­டோ­ரில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்­கி­னர், பாலி­யல் குற்­றத்­திற்­கா­கத் தண்­டிக்­கப்­பட்­ட­வர்­கள் எனக் கூறப்­படுகிறது. சென்ற ஆண்­டின் இறு­தி­யில், மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கிச் சிறை­யில் உள்­ளோ­ரின் மொத்த எண்­ணிக்கை 539 ஆனது. இது 2016ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஆக அதி­கம்.

2015ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 40 விழுக்­காடு அதி­கம்.

நீதி­மன்­றங்­கள் அதி­க­மான வழக்­கு­களில் மர­ண­தண்­டனை விதிப்­ப­தை­யும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றங்­கள் இத்­த­கைய வழக்­கு­களில் குறை­வா­ன­வற்­றுக்கே தீர்ப்­ப­ளித்­தி­ருப்­ப­தை­யும் இது காட்­டு­வ­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

புது­டெல்­லி­யில் உள்ள தேசிய சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம் வெளி­யிட்ட 'இந்­தி­யா­வில் மர­ண­தண்­டனை:

2022க்கான வரு­டாந்­த­ரப் புள்­ளி­வி­வ­ரங்­கள்' எனும் அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

சென்ற ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் அக­ம­தா­பாத் நீதி­மன்­றம் 38 பேருக்கு மர­ண­தண்­டனை விதித்­தது. கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்­புச் சம்­ப­வங்­க­ளின் தொடர்­பில் இவ்­வாறு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. சென்ற ஆண்டு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­­த­தற்கு இது­வும் ஒரு கார­ணம்.

சென்ற ஆண்டு பாலி­யல் குற்ற வழக்­கு­களில் 52 பேருக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இவ்­வாறு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யில் இருக்­கும் கைதி­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் என்று கூறப்­படுகிறது. அங்கு 100 கைதி­கள் மர­ண­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். குஜ­ராத்­தில் இந்த எண்­ணிக்கை 61. ஜார்க்­கண்­டில் 46 பேர் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­கள்.

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றங்­கள் பெரும்­பா­லான முறை­யீட்டு வழக்­கு­களில் மனு­தா­ரரை மர­ண­தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­விப்­ப­தா­கத் தெரி­கிறது.

இருப்­பி­னும் அவை மிக மெது­வா­கவே இவ்­வ­ழக்­கு­களில் தீர்ப்­ப­ளிக்­கின்­றன.

ஒவ்­வோர் ஆண்­டும் நீதி­மன்­றங்­களில் புதி­தாக சில வழக்­கு­களில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­ப­டு­கின்­றது.

இத­னால் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து உயர்ந்­து­வ­ரு­வ­தாக சட்ட வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.