சென்னையில் ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னையில் ஜி20 மாநாடு: மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு

2 mins read
46501f16-0432-4296-a5e2-9e07e68fc9e7
ஜி20 உச்சநிலை மாநாடு இந்த ஆண்டு இந்­தி­யா­வில் நடை­பெ­று­கிறது. இன்று முதல் (ஜன­வரி 31) பிப்­ர­வரி 2வரை சென்­னை­யில் நடை­பெ­றும் இந்த மாநாட்­டில் உல­கில் உள்ள 20 நாடு­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்கு மேற்­பட்ட பிர­தி­நி­தி­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர். படம்: ஏஎஃப்பி -

ஆலந்­தூர்: ஜி20 உச்சநிலை மாநாடு இந்த ஆண்டு இந்­தி­யா­வில் நடை­பெ­று­கிறது. இன்று முதல் (ஜன­வரி 31) பிப்­ர­வரி 2வரை சென்­னை­யில் நடை­பெ­றும் இந்த மாநாட்­டில் உல­கில் உள்ள 20 நாடு­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்கு மேற்­பட்ட பிர­தி­நி­தி­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

இதை­யொட்டி ஜி 20 அமைப்பு சார்­பில், நாடு முழு­வ­தும் உள்ள பல மாநி­லங்­க­ளின் தலை­ந­க­ரம் மற்­றும் முக்­கிய சுற்­றுலா நக­ரங்­களில் ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

31ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யிலும் பிப்­ர­வரி 1, 2 ஆகிய தேதி­களில், சென்னை தாஜ் கோர­மண்­டல் நட்­சத்­திர ஓட்­ட­லி­லும் கூட்­டம் நடக்க இருக்­கிறது.

இந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொள்ள வெளி­நாட்டு பிர­தி­நி­தி­கள் தமிழ்­நாட்­டிற்கு வரத் தொடங்கி உள்­ள­னர். அதை­ய­டுத்து சென்னை விமான நிலை­யத்­தில் கூடு­தல் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு உள்­ளன.

வெளி­நாட்­டுப் பிர­தி­நி­தி­களை வர­வேற்­கும் விதத்­தில், சென்னை விமான நிலை­யத்­தில் மலர் வண்­ணக் கோலங்­கள் வரை­யப்­பட்டு, வர­வேற்­புப் பதா­கை­களும் விமான நிலை­யத்­தின் உள்­ப­கு­தி­யில் இருந்து வெளிப்­ப­குதி வரை வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வர­வேற்பு பதா­கை­களில் தமிழ், ஆங்­கி­லம், இந்தி ஆகிய மூன்று மொழி­களில் எழு­தப்­பட்­டுள்­ளன.

"ஒரு பூமி, ஒரு குடும்­பம், ஒரு எதிர்­கா­லம்" என்று தமி­ழில் எழு­தப்­பட்­டுள்­ளது. பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் உரு­வப் படம் மட்­டுமே அந்த விளம்­பர பதா­கை­யில் இடம்­பெற்­றுள்­ளது. அதில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் புகைப்­ப­டம் இல்லை. பெய­ரும் இடம் பெற­வில்லை. இது­பற்றி சென்னை விமான நிலைய அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­ட­போது, இந்த வர­வேற்பு பதா­கை­கள் அனைத்­தும் ஜி20 மாநாட்­டுக் குழு­வால் தயா­ரித்து அனுப்­பப்­பட்­டுள்­ளது. இந்­தப் பதா­கை­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் சம்­பந்­தம் இல்லை என்று கூறி­ய­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லை­யில், கிழக்­குக் கடற்­கரை சாலை, பழைய மாமல்­ல­பு­ரம் சாலை, புரா­த­னச் சின்­னம், சோத­னைச் சாவடி, கடற்­கரை உள்­ளிட்ட பகு­தி­களில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். அப்­ப­கு­தி­களில் துப்­பாக்கி ஏந்­திய காவல்­து­றை­யி­னர் 24 மணி நேர­மும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர். பிப்­ர­வரி 1ஆம் தேதி தொல்­லி­யல்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள புரா­தனச் சின்­னங்­க­ளுக்கு அரு­கில் செல்ல சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.