ஈரோடு இடைத்தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

ஈரோடு இடைத்தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

1 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தோ்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடங்­கி­யது.

காங்­கி­ரஸ் சட்­டப்­பே­ரவை உறுப்­பினா் திரு­ம­கன் ஈவெரா மறை­வைத் தொடா்ந்து காலி­யான ஈரோடு தொகு­திக்கு இம்மாதம் 27ஆம் தேதி இடைத்­தோ்­தல் நடை­பெ­று­கிறது.

இந்த இடைத்­தோ்­த­லில் திமுக கூட்­டணி சார்­பில் காங் கிரஸ் வேட்­பா­ளர் ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் போட்­டி­யி­டு­கி­றார். அம்மா மக்­கள் முன்­னேற்ற கழ­கம் சார்­பில் சிவப்­பி­ர­சாத், தேமு­திக சார்­பில் ஆனந்த், நாம் தமி­ழர் கட்சி சார்­பில் மேனகா ஆகி­யோர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஆனால், அதி­மு­க­வில் பழனி சாமி, பன்­னீர்­செல்­வம் ஆகிய இருதரப்­பி­ன­ரும் தனித்­த­னி­யா கப் போட்­டி­யி­டு­வ­தாக அறி­வித்­தி­ருந்தாலும் இது­வரை வேட்­பா­ளரை தேர்வு செய்­யா­மல் உள்­ள­தால் குழப்­பம் நீடிக்­கிறது.

ஆங்­காங்கே பிர­சா­ரங்­களும் தீவி­ர­மாக நடை­பெற்று வரும் நிலை­யில், இடைத்­தேர்­த­லுக்­கான வேட்பு மனுத்­தாக்­கல் நேற்று தொடங்­கி­யது.

இத­னி­டையே, ஈரோட்­டில் எடப்­பாடி அணி­யி­னர் ஆலோசனை நடத்­தி­னர். தங்­க­ளுக்கு இரட்டை இலைச் சின்­னம் கிடைக்­கா­விட்­டால் சுயேச்சையாகப் போட்­டி­யிடு­வது குறித்து பேசப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

பிப்­ர­வரி 4ஆம் தேதி அதி­முக வேட்­பா­ளரை அறி­விக்­க­வும் முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அதி­முக பொதுச் செய­லா­ளர் விவ­கா­ரம் தொடர்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் வி.கே. சசி­கலா கேவி­யட் மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார். இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மேல்­மு­றை­யீடு செய்­துள்ள நிலை­யில், தனது கருத்­தை­யும் கேட்­க­வேண்­டும் என 'அதி­முக பொதுச்­செ­ய­லா­ளர்' எனக் குறிப்­பிட்டு அவர் கேவி­யட் மனுத்­தாக்­கல் செய்­தி­ருப்­பது புது திருப்­பத்தை ஏற்­ப­டுத்தியுள்­ளது.