370 கிலோ காரை தூக்கியபடி நடந்து இரும்பு மனிதர் சாதனை

370 கிலோ காரை தூக்கியபடி நடந்து இரும்பு மனிதர் சாதனை

1 mins read
e86c28bb-d91d-4106-8484-7569c4e972a1
-

நாகர்­கோ­வில்: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், நாகர்­கோ­விலை அடுத்த தாம­ரைக்­குட்­டி­வி­ளத் தைச் சேர்ந்­த­வர் கண்­ணன், 39. தமிழ்­நாட்­டின் இரும்பு மனி­தர் என்று அழைக்­கப்­படும் இவர், 370 கிலோ எடைகொண்ட காரை 25 மீட்­டர் தூரம் வரை தூக்­கி­ய­படி நடந்துசென்று பார்வையாளர்­களை அச­ர­வைத்­தார்.

நாகர்­கோ­யில் அண்ணா விளை­யாட்டு அரங்­கத்­தில் நடை­பெற்ற இந்த சாதனை நிகழ்ச்சி யைத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் தொடங்கிவைத்­தார்.

உடற்­கட்­டுப் பயிற்­சி­யா­ள­ராக இருந்து வரும் கண்­ணன், தனது 90 கிலோ எடை­யைப்போல் நான்கு மடங்குக்கும் மேலான எடை கொண்ட காரை தூக்­கிக் கொண்டு 'யோக் வாக்' முறைப்­படி நடந்து சென்றார்.

அப்போது அவரை நண்பர் களும் பொதுமக்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

கண்ணனின் சாதனையை நேரில் பார்­வை­யிட்ட 'சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறு­வன நிர்­வா­கி­கள், அவ­ருக்கு உலகச் சாதனை சான்­றி­தழ், பதக்­கத்தை வழங்­கி­னர்.

பஞ்­சாப்­பில் கடந்த 2020ஆம் ஆண்டு நடை­பெற்ற இரும்பு மனி­தன் போட்­டி­யில் கலந்து கொண்டு மூன்­றா­வது இடம்­பிடித்­த கண்ணன், ஏற்­கெ­னவே 13.5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்­டர் தூரத்­திற்கு இழுத்­துச் சென்று தேசிய அள­வில் சாதனை படைத்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 155 கிலோ கொண்ட ஆடவர் ஒரு­வர் 435 கிலோ காரை 25 மீட்­டர் தூக்கி நடந்து சென்று சாதனை படைத்­துள்­ளார்.