ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதுவரை 232 முறையாக இவர் பல்வேறு தேர்தலிலும் போட்டியிட்டு உள்ளார். தற்போது 233வது முறையாக இடைத்தேர்தலில் போட்டியிடும் இவர், வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேபோல், காந்தியவாதி ரமேஷ், காந்தி வேடம் அணிந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் இதனைத் திரும்பப் பெற பிப்ரவரி 10 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மனுத்தாக்கல் செய்ய வந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் (இடக்கோடி). காந்தி வேடம் அணிந்து தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்த காந்தியவாதி ரமேஷ். பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வைப்புத் தொகையான 10,000 ரூபாயை பத்து ரூபாய் காசுகளாகக் கொடுத்து மனுவைத் தாக்கல் செய்தார். படங்கள்: ஊடகம்

