சென்னை: பொது இடங்களில் புகைப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், "சென்னையில் பள்ளிகளைச் சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்துள்ளது. இதனால், பள்ளிக் குழந்தைகள் சிகரெட் புகையைச் சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாக நாளிதழ் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மலர்களைவிட மென்மையான பள்ளிக்குழந்தைகளுக்கு பிறர் புகைத்து விடும் புகையைச் சுவாசிப்பதால் நுரையீரல், மார்பகம், புற்றுநோய், கணையம், கருப்பைவாய், சிறுநீர்ப்பை உள்ளிட்ட புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இப்பிரச் சினையில் இருந்து குழந்தைகளைக் காக்க சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்," என்று கூறியுள்ளார்.

