கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
355db147-874f-43d7-89d0-4ae2e39257ee
சென்னை மாத­வ­ரத்­தில் கல்­லூரி அருகே கஞ்சா விற்ற இரு­வ­ருக்­குத் தலா 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் மொத்­த­மாக 4 லட்­சத்து 60,000 ரூபாய் அப­ரா­த­மும் விதித்து சென்னை போதைப் பொருள் கடத்­தல் தடுப்பு சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி சி.திரு­ம­கள் தீர்ப்­ப­ளித்­துள்­ளார். படம்: பிக்ஸாபே -

சென்னை: சென்னை மாத­வ­ரத்­தில் கல்­லூரி அருகே கஞ்சா விற்ற இரு­வ­ருக்­குத் தலா 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் மொத்­த­மாக 4 லட்­சத்து 60,000 ரூபாய் அப­ரா­த­மும் விதித்து சென்னை போதைப் பொருள் கடத்­தல் தடுப்பு சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி சி.திரு­ம­கள் தீர்ப்­ப­ளித்­துள்­ளார்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் தேனி மாவட்­டம், கம்­பத்­தைச் சேர்ந்த கோட்­டை­சாமி, சென்னை சத்யா நக­ரைச் சேர்ந்த உதய குமார் ஆகிய இரு­வ­ரும் 40 கிலோ கஞ்­சாவை 50 கிராம் பொட்­ட­லங்­க­ளா­கத் தயா­ரித்து இரு மூட்­டை­களில் ஆட்­டோ­வில் பதுக்கி வைத்­துக்­கொண்டு விற்­பனை செய்­தபோது காவ­லர்­க­ளி­டம் பிடி­பட்­ட­னர்.

கோட்­டை­சாமி, உத­ய­கு­மார் ஆகி­யோர் கைதான நிலை­யில், அது­தொ­டர்­பான வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, நீதி­பதி இவ்­வாறு தீர்­ப்ப­ளித்­தார்.