நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ், கார்த்திகா தம்பதியரின் எட்டு மாதக் குழந்தை மரியா ஆரோனிக்கா நீரிழிவுநோயால் உயிரிழந்தது.
இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் மருத்துவர் கூறுகையில், "மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை மரியா ஆரோனிக்காவைப் பெற்றோர் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து சேர்த்தனர். பரிசோதனையில் 'டைப்-1' வகை நீரிழிவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குழந்தைக்கு சர்க்கரை அளவானது 520 இருந்துள்ளது. இதுபோல் 4 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வர வாய்ப்புள்ளது. ஆறு மாதத்துக்குப் பின்னர் தாய்ப்பாலை தவிர வேறு உணவு குழந்தைக்குக் கொடுக்கும்போது இதுபோல் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. மரியாவுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் மூளை செயலிழந்து உயிரிழந்து விட்டது," எனக் கூறியுள்ளார்.

