பதற வைத்த கொலைகள்; அரசியல் பகையா என காவல்துறை தீவிர விசாரணை

பதற வைத்த கொலைகள்; அரசியல் பகையா என காவல்துறை தீவிர விசாரணை

2 mins read
a6459a81-aee4-4004-b431-a61907bfc59f
அர­சி­யல் பகை கார­ண­மாக இரு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னரா என்­பது குறித்து காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது. படம்: பிக்ஸாபே -

மதுரை: மது­ரை­யில் இந்து மக்­கள் கட்சி நிர்­வா­கி­யும் திரு­வா­ரூ­ரில் விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி நிர்­வா­கி­யும் இரு­வேறு சம்­ப­வங்­களில் படு­கொலை செய்­யப்­பட்­ட­தால் அப்­ப­கு­தி­களில் பதற்­றம் நிலவி வரு­கிறது.

அர­சி­யல் பகை கார­ண­மாக இரு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னரா என்­பது குறித்து காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

மதுரை மாவட்­டம், சோலை அழ­கு­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த மணி­கண்­டன் நகைக்­கடை நடத்தி வந்­தார். நாற்­பது வய­தான அவர் இந்து மக்­கள் கட்­சி­யின் தென்­மா­வட்ட துணைச் செய­லா­ள­ரா­க­வும் பொறுப்­பில் இருந்­தார்.

நேற்று முன்­தி­னம் இரவு தன் கடைக்கு அருகே நின்­றி­ருந்த மணி­கண்­டன் மீது அடை­யா­ளம் தெரி­யாத இரு­வர் கற்­களை வீசித் தாக்­கு­தல் நடத்தி உள்­ள­னர். மேலும் அரி­வாள் கொண்­டும் வெட்­டிய பின்­னர் தப்­பி­யோ­டி­னர்.

இதில் படு­கா­ய­ம­டைந்த மணி­கண்­டன் சிகிச்சை பல­னின்றி மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார். அர­சி­யல் பகை கார­ண­மாக அவர் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் உள்ள அம்­மை­யப்­பன் பகு­தி­யி­லும் அர­சி­யல் கட்சி நிர்­வாகி படு­கொலை செய்­யப்­பட்­டார்.

அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த 22 வய­தான கவி­ய­ர­சன், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி நிர்­வா­கி­யா­கச் செயல்­பட்டு வந்­தார்.

பெட்­ரோல் நிலை­யத்­தில் வேலை பார்த்து வந்த அவர், நேற்று முன்­தி­னம் வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்­த­போது மூன்று இரு­சக்­கர வாக­னங்­களில் வந்த ஏழு பேர் வழி­ம­றித்து அரி­வாள் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளால் தாக்­கி­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து தப்­பிக்க அரு­கி­லுள்ள வயல்­வெ­ளி­யில் இறங்கி ஓடி­யுள்­ளார் கவி­ய­ர­சன். எனி­னும் அக்­கும்­பல் அவரை விடா­மல் துரத்­திச் சென்று கழுத்­தில் வெட்­டி­யுள்­ளது. இதில் கவி­ய­ர­சன் சம்­பவ இடத்­தி­லேயே துடி­து­டித்து பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.