கோவை: கோவையில் குடும்ப மாகச் சென்று கொள்ளை அடித்து வந்த ஒரு கும்பலை தனிப்படை காவலர்கள் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 பவுன் நகையை மீட்டனர்.
கோவை-உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும் விதமாக நடந்துகொண்ட ஐவரிடம் காவலர்கள் விசாரித்தபோது, தாங்கள் குடும்பமாகச் சேர்ந்து கொள்ளை அடித்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் மதுரையைச் சேர்ந்த பார்வதி, 67, பார்வதியின் மகன் கள் கண்ணையா, 30, திவாகர், 26, திவாகரின் இரண்டு மனைவி கள் கீதா, 24, முத்தம்மா, 23, என்பது தெரியவந்தது.
அவர்களில், கொள்ளையன் திவாகர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
“எங்களது சொந்த ஊர் மதுரை. நாங்கள் எங்கு சென்றாலும் குடும்பமாகச் சென்றுதான் திருட்டில் ஈடுபடுவோம். முதலில் நான், என் அம்மா பார்வதி, தம்பி கண்ணையா ஆகிய மூவரும் சேர்ந்துதான் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.
“அந்தச் சமயத்தில் எங்களது அண்டை வீட்டுப் பெண்ணான முத்தம்மாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர், தனது அக்காவுடன் சேர்ந்து திருடி வந்தது தெரியவந்தது.
“நாளடைவில் முத்தம்மாவையும் அவரது அக்காள் கீதாவையும் சமாதானப்படுத்தி, இருவரையும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினேன். அக்கா- தங்கை உறவும் விட்டுப் போகாது, நமது திருட்டுத் தொழிலை மேலும் சிறப்பாகச் செய்து ஜாலியாக, உல்லாசமாக வாழலாம் என்றேன். அதற்கு இருவரும் சம்மதித்ததை அடுத்து இருவரையும் திருமணம் செய்தேன்.
“அவர்களுடன் வாழ்வதற்கு மதுரையில் ஓர் ஈரறை வீட்டை வாங்கினேன். அதன்பின்னர் மீண்டும் இரு மனைவிகள், தாயார், தம்பியுடன் திருட்டுத் தொழிலைத் தொடங்கினோம்.
“மாநிலம் முழுவதும் சென்று திருட்டில் ஈடுபட்டோம். கூட்டம் அதிகமுள்ள பேருந்துகள்தான் எங்களது குறி. மகளிர் இலவசப் பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். எனது இரு மனைவிகளும் தாயாரும் சேர்ந்து பெண்களின் நகைகளை நைசாக அறுத்து எடுத்துவிடுவார்கள். மாதாமாதம் வெவ்வேறு ஊர். இப்படி நகைகளைத் திருடி விற்கும் பணத்தில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துத் தங்குவோம்.
“அங்கு நன்றாகச் சாப்பிட்டு, ஜாலியாக ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு மதுரை திரும்வோம். அங்கு சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ஊரைத் தேர்வு செய்து குடும்பத்துடன் கிளம்புவோம். இவ்வாறு ஊர் ஊராகச் சென்று நகைகளைத் திருடி உல்லாசமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இப்போது பிடிபட்டுள் ளோம்,” என்று கூறியுள்ளார்.