தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றங்களைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை

1 mins read

சென்னை: சிறப்­புத் தணிக்கை நட­வ­டிக்­கை­யாக சென்­னை­யில் வசிக்­கும் குற்­றப் பின்­னணி கொண்ட 403 பேரின் வீடு­க­ளுக்கு நேரில் சென்று காவல்­து­றை­யி­னர் ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

சென்னை, அதன் சுற்று வட்டா­ரப் பகு­தி­களில் வழிப்­ப­றிக் கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளின் ஓர் அங்­க­மாக இந்­தத் தணிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்தது.

அண்­மைய சில மாதங்­க­ளாக சென்­னை­யில் நடை­பெ­றும் குற்­றச் செயல்­களை முற்­றி­லும் தடுக்­கும் வித­மாக காவல்­துறை பல்­வேறு சிறப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இதை­ய­டுத்து, குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­க­ளைக் கண்­கா­ணிக்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக 403 பேர் வீடு­க­ளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்­கொண்ட

காவல்­துறை அதி­கா­ரி­கள் குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­டால் குண்­டர் சட்­டத்­தின் கீழ் நடவடிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரிக்கை விடுத்­த­னர்.

இதற்­கி­டையே, வழிப்­பறி குற்ற வழக்­கு­கள் தொடர்­பாக சென்­னை­யில் ஏற்­கெ­னவே 316 பேர் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­தது. 15 பேரி­டம் திருந்தி வாழ்­வ­தற்­காக நன்­ன­டத்தை உறு­தி­மொழி பிணைப் பத்­தி­ரம் பெறப்­பட்­டது.

தலை­ம­றை­வாக உள்ள குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்து சிறை­யில் அடைக்க காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் உத்த­ர­விட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, ஐந்து லட்­சம் ரூபாய் முத­லீடு செய்­தால் இரண்டு ஆண்­டு­களில் மூன்று கோடி ரூபாய் லாபம் கிடைக்­கும் என்று இணை­யம் வழி ஆசை வார்த்­தை­கள் கூறி மோசடி செய்­யும் கும்­ப­லி­டம் ஏமாந்­து­விடக்கூடாது எனத் தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு பொது­மக்­களை எச்­ச­ரித்­துள்­ளார்.