நால்வர் பலி: 1,000 பெண்கள் முட்டிமோதியதால் விபரீதம்

நால்வர் பலி: 1,000 பெண்கள் முட்டிமோதியதால் விபரீதம்

1 mins read
df469a95-1ab3-453b-b7ca-7c069a22152a
-

இலவச புடவை, வேட்டிக்குத் தள்ளுமுள்ளு; தொழிலதிபர் கைது; பரஸ்பரம் புகார்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற தொழிலதிபர் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கி வருகிறார்.

அவற்றை வாங்க பல கிராமங்களில் இருந்தும் பெரும் கூட்டம் திரளும் என்பதால் முதலில் ஓரிடத்தில் அதற்கான சீட்டு விநியோகிக்கப்படும்.

தொழிலதிபரின் அலுவலக வளாகத்தில் சீட்டு வழங்குவதாக தகவல் பரவியதை அடுத்து பல கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாதர்கள் திரண்டதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் பலரும் மூச்சுவிட முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற வழி­யி­லேயே 60 முதல் 75 வரை வய­துள்ள நான்கு மாதர்­கள் மாண்­டு­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் அறி­வித்­த­னர். சுமார் 12 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் தொழி­ல­தி­பர் கைது செய்­யப்­பட்டு இருக்­கி­றார். மாண்­ட­வர்­க­ளுக்­கும் காயம் அடைந்­த­வர்­க­ளுக்­கும் சுமார் ரூ.200,000 வரை நிவா­ர­ணம் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இவ்­வே­ளை­யில், இல­வச வேட்டி, சேலைக்­கான சீட்­டு­களை விநி­யோ­கிப்­ப­தன் தொடர்­பில் காவல்­துறை அனு­ம­தியை அந்தத் தொழி­ல­தி­பர் பெற­வில்லை என்று ஒரு தரப்பு தெரி­விக்­கிறது.

ஆனால், காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் போதிய பாது­காப்பு வழங்­க­வில்லை என்­றும் மற்­றொரு தரப்பு தெரி­விக்­கிறது. விசா­ரணை தொடர்கிறது.