நன்றிக் கடனாக ராணுவத்துக்குச் சொத்துகளை தானமளிக்கும் 81 வயது முன்னாள் ராணுவ வீரர்

நன்றிக் கடனாக ராணுவத்துக்குச் சொத்துகளை தானமளிக்கும் 81 வயது முன்னாள் ராணுவ வீரர்

2 mins read
34aa1e08-20d7-467a-b7d9-7a07dd2e4e1b
-
multi-img1 of 2

திண்­டுக்­கல்: இந்­திய ராணுவத்­தில் 32 ஆண்­டு­கா­ல­மா­கச் சேவை யாற்றி, ஓய்வு பெற்­றுள்ள இரு­தய சாமி என்ற 81 வயது முதி­ய­வர், தன் மறை­வுக்­குப் பிறகு தனது வீடு, சேமிப்­புப் பணம் உள்­ளிட்ட அனைத்துச் சொத்­து­க­ளை­யும் இந்­திய ராணு­வத்­துக்கு வழங்க உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"இளை­ஞர்­கள் தங்­க­ளது பொன்­னான நேரத்தைச் சோம்­பிக் கிடந்து பாழ்­ப­டுத்திவிடா­மல், விளை­யாட்­டில் அதிக ஈடு­பாடு காட்டவேண்­டும். ராணு­வத்­தில் சேர்ந்து நம் நாட்­டுக்­கும் தமி­ழக மக்­க­ளுக்­கும் பெருமை சேர்க்­க­வேண்­டும்," என அவர் வலி­யுறுத்தி உள்­ளார்.

திண்­டுக்­கல் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வ­ரான சுபே­தார் மேஜர் எஸ்.இரு­த­ய­சாமி, தன் 18 வய­தில் இந்­திய ராணு­வத்­தில் சேர்ந்­தார்.

தேசிய அள­வி­லான தட­க­ளப் போட்­டி­க­ளி­லும் பங்­கேற்­றுள்ள இவர், ராணுவ அதி­காரி ஏ.அருணுக்கு அண்­மை­யில் அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், தானும் தன் மனை­வி­யும் மறைந்த பின்­னர், வீடு, சொத்துகளை இந்திய ராணு­வத்­துக்கு நன்­கொ­டை­யாக அளிப்­ப­தா­க­க் குறிப்­பிட்­டுள்­ளார்.

அத்துடன், வங்கி சேமிப்­புக் கணக்­கில் உள்ள ரூ.10 லட்­சம் பணத்தை ஓய்­வு­பெற்ற ராணுவ வீரர்களின் குழந்­தை­கள் கல்­விக்­கும் முதி­யோர் நல­னுக்­கும் பயன்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

இதுகுறித்து இரு­த­ய­சாமி கூறு­கை­யில், "எங்­க­ளுக்குக் குழந்­தை­கள் கிடை­யாது. எனவே, எனது சொத்­து­களை இந்­திய ராணு­வத்­துக்கு வழங்க முடிவு செய்­துள்­ளேன். மேலும், இம் முடிவை நானும் என் மனை­வி­யும் சேர்ந்­து­தான் எடுத்­துள்­ளோம்," என்று கூறி­யுள்­ளார்.

எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. இந்திய ராணுவம் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளது. அதற்கான நன்றிக் கடனாகவே எனது வீடு, சேமிப்புப் பணம், சொத்துகளை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இம்முடிவை நானும், என் மனைவியும் சேர்ந்துதான் எடுத்தோம்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் இரு­தயசாமி