நீதிபதிக்கு எதிரான வழக்கை ஏற்கமுடியாது: உச்ச நீதிமன்றம்

2 mins read
67f49a60-3bae-4807-be29-6242ca299ecd
-

சென்னை: சென்னை உயர் நீதி­மன்ற கூடு­தல் நீதி­ப­தி­யாக விக்­டோ­ரியா கெளரி நேற்று பத­வி­யேற்­றுக்­கொண்ட சூழ­லில், அவ­ரது நிய­ம­னத்­துக்கு எதிரா கத் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை ஏற்­க­மு­டி­யாது எனக் கூறி உச்ச நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

நேற்று காலை சென்னை உயர் நீதி­மன்ற வளா­கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் பாலாஜி, ராம­கி­ருஷ்­ணன், கலை­மதி, தில­க­வதி, விக்­டோ­ரியா கெளரி ஆகிய ஐந்து பேரும் புதிய உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாகப் பத­வி­யேற்­றுக்­கொண்­ட­னர்.

இவர்­க­ளு­டன் சேர்த்து இங்கு பணி­பு­ரி­யும் நீதி­ப­தி­க­ளின் எண் ணிக்கை 57 ஆக அதி­க­ரித்து உள்­ளது.

இந்­நி­லை­யில், பாஜக நிர்­வா­கி­யாக இருந்த வழக்­க­றி­ஞர் விக்­டோ­ரியா கெள­ரியை புதிய நீதி­ப­தி­யாக நிய­ம­னம் செய்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து சென்னை உயர் நீதி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞர்­கள் சிலர் மனுத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

"தேசி­யப் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்­கும் விவ­கா­ரங்­கள் குறித்­தும் இந்­தி­யா­வில் குறிப்­பிட்ட சில அமைப்­பு­கள் கலா­சார அத்­து­மீ­றல்­களில் ஈடு­படு­வ­தா­க­வும் வழக்­க­றி­ஞர் விக்­டோ­ரியா கெளரி பேசிய காணொ­ளிப் பதிவு சமூக வலைத்­த­ளங்­களில் உள்­ளது," என்று தங்­க­ளது மனு­வில் மூத்த வழக்­க­றி­ஞா்­கள் குறிப்­பிட்­டி­ருந்­தனா்.

இந்த மனுவை அவ­சர வழக்­காக விசா­ரிக்க வேண்­டும் என்று அவர்­கள் கோரி­யி­ருந்­த­னர்.

இவ்­வ­ழக்கு உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் சஞ்­சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, தானே மாண­வ­னாக இருந்­த­போது அர­சி­யல் கட்சி சார்­பில் செயல்­பட்டு இருப்­ப­தாக நீதி­பதி கவாய் தெரி­வித்­தார்.

அர­சி­யல் பின்­பு­லம் கொண்­ட­வர்­கள் நீதி­ப­தி­க­ளாகப் பத­வி­யேற்­றுள்ள சம்­ப­வங்­கள் நட­ந்துள்­ளன. நீதி­ப­தி­களை அவர்­க­ளது சமூக வலைத்­த­ளப் பதி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பின்­தொ­டர முடி­யாது. அனைத்து விவ­ரங்­க­ளை­யும் ஆய்வு செய்த பின்­னரே நீதி­ப­தி­யாக கொலிஜி­யம் அமைப்பு பரிந்­து­ரைக்­கும் என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.