சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது முன்னாள் உதவி யாளர் பூங்குன்றன் தெரிவித்து உள்ளார்.
மறைந்த, அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, தன்னிடமும், சைதை துரைசாமி யிடமும் தெரிவித்த கல்வி அறக் கட்டளை விருப்பத்தை பூங்குன்றன் தற்போது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு கல்வி அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் அது குறித்து மூன்று பெயர்களை பரிசீலித்ததாகவும் அவர் கூறி னார்.
“ஜெயலலிதாவின் நிறை வேறாத ஆசை ஒன்று உள்ளது. அன்றைய மேயர் சைதை துரை சாமி, ஜெயலலிதாவைச் சந்தித்த போது கல்வி அறக்கட்டளைப் பற்றி பேசினார்.
அப்போது, என்னை அழைத்த ஜெயலலிதா மூன்று பெயர்களைக் கொடுத்து நியூமராலஜிபடி எது சரியாக வருகிறது என்று பார்க்கச் சொன்னார்.
ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு என்னைப் பார்த்த சைதை துரைசாமி, தம்பி உன்னைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய நண்பர் புலவருடைய மகன் மீது ஜெயலலிதா வைத்திருக்கும் நம்பிக்கை என்னை மனம் குளிரச் செய்கிறது என்றார். மேலும், ஜெயலலிதா பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கச் சொல்லி இருக்கிறார்கள். அதில் பூங்குன்றனையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மிகப்பெரிய நிதி உதவியை நான் வழங்குகிறேன். உங்கள் இருவர் பெயரில் அது நடக்கட்டும் என்று தெரிவித்ததாக மிகுந்த உவகையோடு சைதை துரைசாமி என்னிடம் தெரிவித்தார்,” என்று பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அறக்கட்டளைக்குரிய ஏற்பாடுகளை சைதை துரைசாமி செய்வார் என்றும் அது குறித்த தகவல்களை அவர் தெரிவித்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.
“கடைசி மனிதன் இருக்கும் வரை அந்த அறக்கட்டளை செயல்பட வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதாவின் ஆசை இன்று வரை நிறைவேறாமல் இருக்கிறது. ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளையைத் தொடங்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. அதை பெரிதாக கொண்டு செல்லும் அளவிற்கு வசதியும் என்னிடம் இல்லை. மாடாய் உழைப்பேன். எனவே சைதை துரைசாமி, ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்ற முயல வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.