நாமக்கல்லில் தேங்கிக் கிடக்கும் முட்டைகள்

நாமக்கல்லில் தேங்கிக் கிடக்கும் முட்டைகள்

1 mins read

நாமக்­கல்: நாமக்­கல் மண்­ட­லத்­தில் கோடிக்­க­ணக்­கான முட்­டை­கள் தேங்­கிக் கிடக்­கின்­றன. நாமக்­கல் மண்­ட­லத்­தில் உள்ள ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கோழிப்­பண்­ணை­களில் 5 கோடிக்­கும் அதி­க­மான முட்டைக் கோழி­கள் வளர்க்­கப்­பட்டு தின­மும் நான்கு கோடிக்­கும் அதி­க­மான முட்­டை­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. இந்­நி­லை­யில் கடந்த மாதம் 9ஆம் தேதி முட்­டை­க­ளின் பண்ணை விற்­பனை விலை 565 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

நாமக்­கல் முட்டை விற்­பனை வர­லாற்­றில் அது மிக அதி­க­பட்ச விலை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இத­னால் கோழிப்­பண்­ணை­யா­ளர்­கள் மகிழ்ச்சி அடைந்­தா­லும் அசை­வப் பிரி­யர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர். இதை­ய­டுத்து 12 நாட்­க­ளாக இதே நிலை நீடித்­த­தால் முட்டை விற்­ப­னை­யில் சரிவு ஏற்­பட்­டது.

இத­னால் நாமக்­கல் கோழிப்­பண்­ணை­ கிடங்­கு­களில் கோடிக்­ க­ணக்­கான முட்­டை­கள் தேங்­கத் தொடங்­கின.

இதன் கார­ண­மாக முட்டை விற்­ப­னையை அதி­க­ரிப்­ப­தற்­காக பண்­ணை­யா­ளர்­கள் முட்டை விலையைக் குறைக்­கத் தொடங்­கி­னர்.

முட்­டை­யின் பண்ணை விற்­பனை விலை 565 காசு­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யா­கச் சரிந்து 460 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தற்­போது வரை 460 காசு­க­ளாக முட்டை விலை நீடிக்­கிறது. முட்டை விலை குறைந்து விற்­பனை அதி­க­ரித்­தா­லும் முட்டைகள் கோடிக்­க­ணக்கில் இன்­ன­மும் தேங்­கிக் கிடக்­கின்­றன.

இதற்­கி­டையே முட்டை விலை குறைந்­த­தால் தின­மும் 5 கோடி ரூபாய் அள­வுக்கு நட்­டம் ஏற்­ப­டு­ வ­தாகக் கோழிப் பண்­ணை­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.