சென்னை விமான நிலையத்தில் பழைய விமானங்களை அகற்ற ஆணையம் உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் பழைய விமானங்களை அகற்ற ஆணையம் உத்தரவு

1 mins read

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தில் நிறுத்தி வைக்­கப் பட்­டுள்ள மூன்று பழைய விமா­னங்­களை அகற்ற ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மூன்று பதிவு நீக்­கம் செய்­யப்­பட்ட விமா­னங்­கள் நீண்­ட­கா­லத்­திற்கு முன்பே சென்னை விமான நிலை­யத்­தில் கைவி­டப்­பட்­ட­தா­க­வும் அவற்­றைத் தற்­போ­தைய உரி­மை­யா­ளர்­கள் பொருந்­தக் கூடிய அனைத்து நிலு­வைத் தொகை­க­ளை­யும் செலுத்தி 10.02.2023 அன்று அல்­லது அதற்கு முன் சென்னை விமான நிலைய வளா­கத்­தில் இருந்து அகற்­று­மாறு பொது­மக்­க­ளுக்கு இதன் மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­துள்­ள­னர்.

ஏஏஐ சட்­டம் 1994ன் கீழ் மேற்­கூ­றிய மூன்று விமா­னங்­களை அகற்­று­வ­தற்­கான வெளி­யேற்ற நட­வ­டிக்­கை­கள் தொடங்­கப்­பட்டு உள்ளன. விசா­ரணை தேதி 10.02.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடை­பெ­றும். விமான நிலைய இயக்­கு­ந­ரின் அலு­வ­ல­கத்­தில் உரி­மை­யா­ளர்­கள் விசா­ர­ணைக்கு வரு­மாறு இதன் மூலம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றார்­கள். இல்­லை­யெ­னில் நட­வ­டிக்­கை­கள் வெகு­வே­கத்­தில் நடை­பெ­றும் என்று அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.