பட்டுப் புடவைகள் கொள்ளை

பட்டுப் புடவைகள் கொள்ளை

1 mins read

சென்னை: சென்னை தியா­க­ராய நக­ரில் உள்ள பிர­பல துணிக்­க­டைக்­குச் சொந்­த­மான கிடங்­கி­லி­ருந்து ரூ.28 லட்­சம் (S$44,866) மதிப்­புள்ள பட்­டுப்­பு­ட­வை­கள் கொள்ளை அடிக்­கப் பட்­டன.

பட்­டுப் புட­வை­களை ஆட்­டோ­வில் கொள்­ளை­ய­டித்­துச் சென்ற கிடங்­குக் காவ­லா­ளி­யைக் காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.

சென்னை தியா­க­ராய நக­ரில் 'ரேகா கலெக்­‌ஷன்' என்ற பெய­ரில் பிர­பல துணிக்­கடை உள்­ளது. அந்­தக் கடைக்­குச் சொந்­த­மான கிடங்கு தியா­க­ரா­ய­ந­கர் வடக்கு உஸ்­மான் சாலை திலக் தெரு­வில் உள்­ளது.

அந்­தக் கிடங்­கில் லட்­சக்­க­ணக்­கான மதிப்­புள்ள பட்­டுப்­பு­ட­வை­கள் கொள்­ளை­ய­டிக்­கப் பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் காலை­யில் வழக்­கம்­போல கடை ஊழி­யர்­கள் வந்து கிடங்­கைத் திறந்­து­பார்த்­த­போது 26 பட்­டுப்­பு­டவை பண்­டல்­களைக் காண­வில்லை. கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பட்­டுப்­பு­ட­வை­க­ளின் மதிப்பு ரூ.28 லட்­சம் ஆகும்.

இது தொடர்­பாகத் துணிக்­கடை சார்­பில் பாண்­டி­ப­ஜார் காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து விசா­ர­ணை­யைத் தொடங்­கிய காவ­லர்­கள், அந்­தப்­ப­கு­தி­யில் பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ராவை ஆய்வு செய்­த­னர்.

அப்­போது கிடங்­கில் காவ­லராக வேலைப் பார்த்த ராம் என்­ப­வர், பட்­டுப்­பு­ட­வை­களைக் கொள்­ளை­ய­டித்து ஆட்டோ ஒன்­றில் மற்­றொ­ரு­வ­ரின் உத­வி­யு­டன் ஏற்றிச் செல்­லும் காட்சி பதி­வாகி இருந்­தது. காவ­லாளி ராம், ராஜஸ்­தான் மாநி­லத்­தைச்­சேர்ந்­த­வர். அவ­ரை­யும் அவ­ரு­டன் இருந்த நப­ரை­யும் காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.