8 கோடி தமிழக மக்களின் வாழ்த்து பெற ஸ்டாலின் ஆசை

8 கோடி தமிழக மக்களின் வாழ்த்து பெற ஸ்டாலின் ஆசை

1 mins read

சென்னை: முதல்­வர் மு.க. ஸ்டா­லின் நேற்­றுக் காலை சென்னை தலை­மைச்­செ­ய­ல­கத்­தில் நடை­பெற்ற ஆய்­வுக்­கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.

அமைச்­சர்­களும் மூத்த ஐஏஎஸ் அதி­கா­ரி­களும் பங்­கேற்ற அந்­தக் கூட்­டத்­தில் திட்­டங்­க­ளின் சிறப்­பான செயல்­பாட்­டிற்­காக எடுக்­கப்­பட்ட நட­

வ­டிக்­கை­கள் குறித்து ஸ்டா­லின் கேட்­ட­றிந்­தார். திட்­டங்­க­ளைச் சிறப்­பாக செயல்­ப­டுத்த, சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளு­டன் இணைந்து செயல்­பட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை அவர் எடுத்­துக்­கூ­றி­னார்.

"கடந்த 20 மாத காலத்­தில் எத்­த­னையோ நல்ல பல திட்­டங்­களை உரு­வாக்­கிச் செயல்­

ப­டுத்தி வரு­கி­றோம். மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்­தில் ஒரு கோடிக்­கும் அதி­க­மா­னோர் பய­ண­டைந்­துள்­ள­னர்.

பள்­ளி­களில் காலை உண­வுத் திட்­டம் மூலம் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் நம்மை வாழ்த்­திக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

"இல­வச மின் இணைப்பு பெறும் விவ­சா­யி­கள் பாராட்டி வரு­கின்­ற­னர். அதே­போல மாதந்­தோ­றும் ரூ.1,000 பெறும் மாண­வி­ய­ர் பாராட்­டு­கின்­ற­னர். இவை அனைத்­துமே நம்­மு­டைய கண்­ணுக்கு முன்­னால் தெரி­யக்­கூ­டிய மகிழ்ச்­சி­கள்.

"இதே­போல எல்­லாத் திட்­டங்­களும் செயல்­பாட்­டுக்கு வரும் போது 8 கோடி மக்­க­ளா­லும் பாராட்­டப்­படும் அர­சாக இந்த அரசு உயர்ந்­து­வி­டும். இது உங்­கள் கைக­ளில்­தான் உள்­ளது. அறி­விக்­கப்­பட்ட செயல்­திட்­டங்­கள் எப்­படி பயன்­பாட்­டுக்கு வரு­கின்­றன என்று பார்க்க வேண்­டும்.

"அதில் சுணக்­கம் வந்­தால் எத­னால் வரு­கிறது, அந்­தத் திட்­டத்தை முடிக்க என்ன செய்ய வேண்­டும் என்று யோசிக்க வேண்­டும்," என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.