தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டு

1 mins read

மதுரை: மதுரை திருப்­ப­ரங்­குன்றம் மலைக்­குன்று முழு­வ­தும் வர­லாற்று சிறப்­பு­டை­ய­தா­கத் திகழ்­கிறது. இக்­குன்­றில் முற்­கால பாண்­டி­யர்­க­ளின் பல குடை­வ­ரைக் கோயில்­கள் உள்­ளன. திருப்­ப­ரங்­குன்­றம் ரயில் நிலை­யம் எதி­ரி­லுள்ள குன்­றின் மேற்­குச் சரி­வில் இயற்­கை­யாக அமைந்த இரண்டு குகை­கள் உள்­ளன.

அதில் மேலே உள்ள குகை­யில் ஏரா­ள­மான கற்­ப­டுக்­கை­களும் கி.மு.1 மற்­றும் கி.பி.1ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த 3 தமிழி கல்­வெட்­டு­களும் உள்­ளன. இவை மத்­திய தொல்­லி­யல் துறை­யால் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இத­னி­டையே, மேலே உள்ள குகைக்­குச் செல்­லும் வழி­யில் அதன் இட­து­பு­றம் ஒரு சிறிய குகை உள்­ளது. இதன் உள்ளே 5 கற்­ப­டுக்­கை­கள் உள்­ளன.

வட்­ட­வ­டி­வ­மான இதன் முகப்­புப் பகு­தி­யில் மழை­நீர் உள்ளே செல்­லா­த­வாறு காடி வெட்­டப்­பட்­டுள்­ளது. இக்­கு­கை­யின் விதா­னத்­தின் மேற்­குப் பகு­தி­யில் ஒரு தமிழி கல்­வெட்டு இருப்­பதை பாறை ஓவி­யம், கல்­வெட்டு, குடை­வ­ரை­கள் பற்றி ஆய்வு செய்துவரும் மதுரை தொல்­லி­யல் ஆய்­வா­ளர் வெ.பால­மு­ரளி கண்­ட­றிந்­தார்.

தொடர்ந்து அதி­கா­ரி­கள் நேரில் சென்று இக்­கல்­வெட்டை படி எடுத்­த­னர்.

தமி­ழக அர­சின் ஓய்­வு­பெற்ற தொல்­லி­யல் நிபு­ணர் சாந்­த­லிங்­கம் துணை­யு­டன் படி­யெ­டுத்த கல்­வெட்டை படித்­த­தில் சுமார் 2200 ஆண்­டு­கள் பழ­மை­யான தமிழி கல்­வெட்டு அது என அறி­யப்­பட்­டது.