சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேற்று இலங்கை சென்றனர். யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசப் போவதாக முருகன் கூறினார்.
பாஜக தலைவர்கள் இலங்கை பயணம்
1 mins read

