எழுதாத பேனாவைக் கடலில் வைக்க ரூ.80 கோடி செலவு தேவையா என இபிஎஸ் கேள்வி கருத்துக் கணிப்புக்குத் தடை

எழுதாத பேனாவைக் கடலில் வைக்க ரூ.80 கோடி செலவு தேவையா என இபிஎஸ் கேள்வி கருத்துக் கணிப்புக்குத் தடை

2 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லுக்­கான இறுதி வேட்­பா­ளர் பட்­டி­யல் நேற்று மாலை வெளி­யி­டப்­பட்­டது.

இத்­தேர்­த­லில் காங்­கி­ரஸ், அதி­முக, நாம் தமி­ழர், தேமு­திக உள்­ளிட்ட கட்­சி­கள் போட்­டி­யிடும் சூழ­லில், வெற்றி தோல்வி குறித்த ஆரு­டங்­களை வெளி­யிடத் தேர்­தல் ஆணை­யம் தடைவிதித்­துள்­ளது.

இம்மாதம் 16 முதல் இடைத்தேர்­தல் நடைபெற உள்ள 27ஆம் தேதிவரை கருத்­துக் கணிப்பு களை வெளி­யி­டக்கூடாது என தமி­ழ­கத் தலை­மைத் தோ்தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு அறி­வித்­துள்ளாா்.

வாக்­குப்பதிவு காலகட்டத்தில் கருத்­துக் கணிப்புகளை வெளி­யி­டக் கூடாது என்­றும் வாக்­குப் பதிவு நிறைவடைந்த பின்­னர் விவ­ரங்­களை வெளி­யி­ட­லாம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

திமுக கூட்­டணி சார்­பில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் வேட்­பா­ளர்­ ஈவி­கே­எஸ் இளங்­கோ­வ­னும் அதி­முக சார்­பில் தென்­ன­ர­சும் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

இளங்­கோவனுக்கு ஆத­ர­வாக அமைச்­சர்­கள் நாசர், செஞ்சி மஸ்­தான் உள்­ளிட்­டோ­ரும் திமுக நிர்­வா­கி­களும் வீடு­வீ­டா­கச் சென்று வாக்­குச் சேக­ரித்­த­னர்.

இத­னி­டையே வேப்­பம்­பா­ளை­யத்­தில் நடை­பெற்ற அதி­முக கூட்­டத்­தில் பேசிய பழ­னி­சாமி, ஈரோடு இடைத்­தேர்­த­லில் அதி­மு­க­வின் செல்­வாக்கை கண்டு திமுக அஞ்­சு­வ­தா­கக் கூறி­ய­வர், அதி­முக அமோக வெற்­றி­பெ­றும் என நம்­பிக்­கை தெரி­வித்­தார்.

இடைத்­தேர்­த­லில் அமைச்­சர்­களைக் கள­மி­றக்கி வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணத்தை திமுக வாரி இறைப்­ப­தா­கக் குற்­றம்­சாட்­டிய பழ­னி­சாமி, தேர்­தல் ஆணை­ய­மும் காவல்­து­றை­யும் பணப்புழக்­கத்­தைத் தடுக்­கா­மல் கண்­டும்­கா­ணா­மல் வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கச் சாடி­னார்.

எழு­தாத பேனா­விற்கு ரூ.80 கோடி செலவு செய்­வதா எனக் கேட்­டுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, ரூ.2 கோடியில் மறைந்த கரு­ணா­நிதி நினைவு மண்­ட­பத்­தில் பேனாவை வைத்­து­விட்டு, மீத­முள்ள 78 கோடியை மக்களுக்­குச் செல­வி­ட­லாமே என்றும் யோசனை கூறியுள்ளார்.

"பொங்­கல் தொகுப்­பில் ரூ. 500 கோடிக்கு ஊழல் நடந்­துள்­ளது. அத­னை­த்தான் இப்­போது தேர்­த­லுக்குச் செல­வி­டு­கின்­ற­னர். அது உங்­களது பணம். அதனை வாங்­கிக்­கொள்­ளுங்­கள். வாங்­கிக்கொண்டு, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்," என்றும் பேசியுள்ளார்.

ஈரோட்­டில் அமைச்­சர் கே.என்.நேரு கூறு­கை­யில், "சென்னை-கோவைக்கு இணை­யாக ஈரோடு மாந­க­ராட்சியின் தரமும் உயர்த்­தப்­படும். சாலை­களும் குடி­நீர் விநி­யோ­க­மும் தேர்­தல் முடிந்­த­வு­டன் உட­ன­டி­யாகச் சீர­மைக்­கப்­படும்," என்றார்.

இத­னி­டையே, இளங்கோவ னுக்கு கை சின்னம், தென்ன ரசுக்கு இரட்டை இலைச் சின்னம், தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய் துள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.