தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கபடி விளையாடிய மாணவி சரிந்து விழுந்து உயிரிழப்பு

1 mins read

புது­டெல்லி: தனது பள்­ளி­யில் நடந்த கபடி விளை­யாட்­டுப் போட்­டி­யில் மிக­வும் துடிப்­பாக விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒரு­வர் திடீ­ரென சரிந்து விழுந்து மார­டைப்­பால் உயி­ரி­ழந்த சம்­ப­வம் சோகத்­தை ஏற்­ப­டுத்தியுள்­ளது.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம், ஓசூர் அருகே உள்ள தனி­யார் பள்­ளி­யில் 10ஆம் வகுப்பு மாணவி கீதா (உண்­மைப் பெய­ரல்ல) கபடி விளை­யா­டிக் கொண்­டி­ருந்தபோது திடீ­ரென மயங்கி விழுந்­தார்.

உட­ன­டி­யாக மாண­விக்­குத் தண்­ணீர் கொடுத்­தும் அவ­ரது முகத்­தில் தண்­ணீர் தெளித்­தும் அவர் எழுந்­தி­ருக்காததால், ஆசி­ரி­யர்­கள் அவரை மருத்­து­வ­ ம­னைக்கு தூக்­கிச்சென்­ற­னர்.

பரி­சோதனையில் மார­டைப்பு ஏற்­பட்டு மாணவி இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் கூறி­னர்.