ஆதரவற்றோர் 17 பேர் காணாமல் போனது விசாரணையில் அம்பலம்

ஆதரவற்றோர் 17 பேர் காணாமல் போனது விசாரணையில் அம்பலம்

2 mins read

விக்­கி­ர­வாண்டி: விழுப்­பு­ரத்­தில் உள்ள ஓர் ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தில் தங்கி இருந்­த­வர்களில் 17 பேரைக் காண­வில்லை என வெளி­வந்­துள்ள தக­வல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

விழுப்­பு­ரம் மாவட்­டம், விக்­கிர வாண்டி அருகே உள்ள குண்­டல புலி­யூர் கிரா­மத்­தில் செயல்­பட்டு வரும் 'அன்பு ஜோதி' என்ற தனி­யார் ஆசி­ர­மத்­தில் நூற்றுக்­கும் மேலான முதி­ய­வர்­கள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­த­னர்.

இந்த ஆத­ர­வற்­றோர் இல்­ லத்தை கேர­ளா­வைச் சேர்ந்த ஜீபின் பேபி, 45, என்­ப­வர் கடந்த 2000ஆம் ஆண்­டில் இருந்து நடத்தி வரு­கி­றார். இங்கு 140 ஆத­ர­வற்­றோர் தங்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தில் அதி­கா­ரி­கள் நடத்­திய விசா­ர­ணை­யில் 17 பேர் காணா­மல் போயுள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே, திருப்­பூ­ரைச் சேர்ந்த சலீம் கான் என்­ப­வர் தனது மாம­னார் ஜாப­ருல்லா, 45, என்ற மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வரை இந்த ஆசி­ர­மத்­தில் கடந்த 2021ல் சேர்த்­துள்­ள­ார்.

தனது பணி­யின் கார­ண­மாக அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­று­விட்டு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பி­னார்.

அப்­போது, தனது மாம­னார் ஜாப­ருல்­லா­வைப் பார்ப்­ப­தற்­காக 'அன்பு ஜோதி' இல்­லத்­திற்கு வந்து விசா­ரித்­தார்.

"இங்கு போது­மான இடம் இல்­லா­த­தால் ஜாப­ருல்­லாவை பெங்­க­ளூ­ரு­வில் உள்ள ஆதர வற்­றோர் இல்­லத்­திற்கு இட மாற்­றம் செய்­து­விட்­டோம். நீங்­கள் அங்கு சென்று பாருங்­கள்," என இல்­லத்­தின் உரி­மை­யா­ளர் ஜீபின் பேபி தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், ஜாப­ருல்­லாவை பெங்­க­ளூ­ரு­வி­லும் காணா­த­தால் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் சலீம் கான் ஆட்­கொ­ணர்வு மனுத் தாக்­கல் செய்­தார்.

இதைத்­தொ­டர்ந்து நீதி­மன்ற உத்­த­ரவை அடுத்து, ஆசிரமத்­தில் காவ­லர்­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது, ஆசி­ர­மம் உரிய அனு­ம­தி­யின்றி இயங்கி வந்­த­தும் 17 முதி­ய­வர்­கள் காணா­மல் போயி­ருப்­ப­தும் தெரி­ந்தது.

அத்­து­டன், ஆசி­ர­மத்­தில் இறந்த முதி­ய­வர்­கள் குறித்த ஆவ­ணங்­க­ளை­யும் நிர்­வா­கத்­தி­னர் முறை­யா­கப் பரா­ம­ரிக்­க­வில்லை என்­ப­தும் உறு­தி­யா­னது.

ஆசி­ர­மத்­தில் தங்­கி­யி­ருந்த ஆத­ர­வற்­றோர், மாற்­றுத்­தி­ற­னாளி பெண்­களை பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்தி வந்­த­தும் முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரியவந்­துள்­ளது. ஆசி­ர­மத்­தில் தங்­கி­யுள்ள வர்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடை­பெற்று வரு­கிறது.