தவறான சிகிச்சை; இழப்பீடு வழங்க உத்தரவு

தவறான சிகிச்சை; இழப்பீடு வழங்க உத்தரவு

3 mins read

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: பிரான்ஸ் நாட்­டில் வசிக்­கும் புளோரா எனும் இலங்­கைத் தமி­ழர், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

அதில் சென்னை நுங்­கம்­பாக்­கத்­தில் உள்ள ஜி.ஜி. மருத்­து­வ­ ம­னை­யில் தவ­றான சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தால் நிரந்­த­ர­மாக முடங்­கி­ய­தாக அவர் கூறி­யி­ருந்­தார்.

"கருத்­த­ரிப்பு சிகிச்­சை­யில் நிபு­ணத்­து­வம் பெற்ற மருத்­து­வ­மனை என்று கேள்­வி­யுற்­ற­தால் அங்கு சிகிச்­சைக்­குச் சென்­றேன். என்­னைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், கருப்­பை­யில் கட்டி உள்­ள­தா­கக் கூறி அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்­டும் என்­ற­னர். அதன்­படி எனக்கு 2013ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்­தது. அதன் பின்­னர் எனக்கு மூச்­சுத்­தி­ண­றல், வாந்தி, தாங்க முடி­யாத வயிற்­று­வலி ஏற்­பட்­டன.

"அங்­கி­ருந்த தாதி­யர் மூலம் மருத்­து­வர்களி­டம் தெரி­வித்­தேன். இவை­யெல்­லாம் சிகிச்­சைக்குப் பின்­னர் ஏற்­படும் வழக்­க­மாக நிகழ்­வு­கள் என்று மருத்­து­வர்­கள் கூறி­னர்.

"என்­னால் வலி­யைத் தாங்­க­மு­டி­யா­மல் துடித்­த­போது, என்­னைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் எந்த ஒரு ஒப்­பு­த­லை­யும் பெறா­மல் 2வது அறுவை சிகிச்சை செய்­த­னர்.

"பின்­னர், என்னை அப்­போலோ மருத்­து­வ­ம­னைக்கு இடம்­மாற்­றி­னர். அங்கு என்­னைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், அறுவை சிகிச்­சை­யில் தவறு நடந்­துள்­ள­தா­க­வும் பெருங்­கு­ட­லில் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னர்.

"அதன் பின்­னர் 3வது அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டது. அப்­போது என் சகோ­த­ர­ரி­டம் ஜி.ஜி. மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தி­னர் ரூ.5 லட்­சம் தரு­வ­தா­க­வும் இந்­தப் பிரச்­சி­னையை வெளி­யில் சொல்ல வேண்­டாம் என்­றும் சம­ர­சம் பேசி­னர். இதை நாங்­கள் ஏற்­க­வில்லை.

"தவ­றான அறுவை சிகிச்­சை­யால் சுமார் 37 நாள்­கள் மருத்து வம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு பல லட்­சம் ரூபாய் செலவு செய்து உயி­ரைக் காப்­பாற்ற போரா­டி­யுள்­ளேன். கடு­மை­யான மன உளைச்­ச­லுக்கு ஆளா­னேன். எனவே எனக்கு ஒரு கோடியே 50 லட்­சம் ரூபாய் ( S$ 241,812 ) இழப்­பீடு வழங்க ஜி.ஜி. மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­துக்கு உத்­த­ர­விட வேண்­டும்." என்று தனது மனு­வில் அவர் கோரி­ இருந்தார்.

இந்த வழக்கை நீதி­பதி ஜி.சந்­தி­ர­சே­க­ரன் விசா­ரித்­தார்.

அப்­போது மனு­தா­ரர் தரப்­பில் முன்னிலை­யான வழக்­க­றி­ஞர், "தவறான அறுவை சிகிச்­சை­யால் மனு­தா­ர­ரின் பெருங்­கு­டல் நிரந்­த­ர­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர் மலத்தை வெளி­யேற்ற வயிற்­றுக்கு மேல் பை ஒன்று நிரந்­த­ர­மாகப் பொருத்­தப்­பட்­டுள்­ளது. அதன் வழி­யா­கத்­தான் மலம் கழிக்க வேண்­டும்.

"இத­னால் அவ­ரால் பிற­ரு­டன் பழக முடி­ய­வில்லை. பார்த்­துக்­கொண்­டி­ருந்த வேலை­யை­யும் இழந்­துள்­ளார். பிறர் உதவி இல்­லா­மல் வாழ­ மு­டி­யாத நிலைக்கு அவர் தள்­ளப்­பட்­டுள்­ளார் என்று சொன்னார்.

இதற்கு மறுப்பு தெரி­வித்து மருத்­து­வ­மனை நிர்­வா­கம் சார்­பில் வாதி­டப்­பட்­டது.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நீதி­பதி, தவ­றான சிகிச்­சை­யால் மனு­தா­ரர் நிரந்­த­ர­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளதாக தீர்ப்பு வழங்கினார்.

"வழக்­க­மான, அன்­றாட வாழ்க்­கையை வாழ­மு­டி­யாத நிலைக்கு அவர் தள்­ளப்­பட்­டுள்­ளார். எனவே அவ­ருக்கு இழப்­பீ­டாக ரூ.40 லட்­சத்தை ( S$ 64,483 ) 12% வட்­டி­யு­டன் ஜி.ஜி. மருத்­து­வ­மனை நிர்­வா­கம் வழங்க வேண்­டும்," என்று நீதிபதி உத்­த­ர­விட்­டார்.