தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துக் கொள்ளை

2 mins read
75ba2310-4fd0-47be-adf3-af56b103adc9
-

திரு­வண்­ணா­மலை: திரு­வண்­ணா­ம­லை­யில் ஒரே இர­வில் நான்கு வங்­கி­க­ளின் ஏடி­எம் இயந்­தி­ரங்­களை உடைத்து கொள்­ளை­­யர்­கள் ரூ. 75 லட்­சத்­துக்­கும் அதி­க­மாக கொள்­ளை ­ய­டித்­துள்­ள­னர்.

ஒரே இர­வில் அடுத்­த­டுத்து நடந்த கொள்­ளைச் சம்­ப­வங்­களால் திரு­வண்­ணா­மலை மக்கள் அதிர்ச்­சி­ அ­டைந்­துள்­ளனர்.

திரு­வண்­ணா­மலை மாரி­யம்­மன் கோயில் 10வது தெரு­வில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் ஏடி­எம் இயந்­தி­ரத்­தி­லி­ருந்து சனிக்­கி­ழமை இரவு மர்ம கும்­பல் ஒன்று சுமார் ரூ.33 லட்­சத்தை கொள்­ளை­ய­டித்தது.

இது, அன்று நடை­பெற்ற முதல் கொள்­ளைச் சம்­ப­வ­மா­கும். இதற்கு அடுத்­த­டுத்து இதே பாணி­யில் ஏடி­எம் கொள்ளைகள் நடந்­துள்­ளன. கொள்­ளை­ய­டித்­த­தற்­கான தட­யங்­கள் எது­வும் கிடைக்­கக் கூடாது என்­ப­தற்­காக அவர்­கள் ஏடி­எம் இயந்­தி­ரத்தை தீ வைத்து கொளுத்­தி­யுள்­ள­னர்.

இதே­போல போளூர் ரயில் நிலை­யம் அருகே இருந்த ஏடி­எம் இயந்­தி­ரத்­தி­லும் கொள்ளை சம்­ப­வம் அரங்­கே­றி­யுள்­ளது. இதி­லும் ஏடி­எம் இயந்­தி­ரம் தீ வைத்து கொளுத்­தப்­பட்­டது. இந்த இரண்டு சம்­ப­வங்­களும் ஒரே நாளில் நடந்­துள்­ளன.

இது குறித்து காவல்­து­றை ­யி­னர் விசா­ரணை மேற்­கொண்ட வேளை­யில் மேலும் இரண்டு ஏடி­எம்­களும் தீப்­பி­டித்து எரி­வ­தாகத் தக­வல் வந்­தது.

இதை­ய­டுத்து காவல்­துறை விசா­ரித்­த­தில் தண்­ட­ராம்­பட்டு சாலை­யில் உள்ள ஏடி­எம், கல­சப்­பாக்­கம் ஆண்­கள் மேல்­நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடி­எம் ஆகிய இரண்­டும் கொள்­ளை­ யடிக்­கப்­பட்ட விவ­ரம் தெரிய வந்­தது.

"கொள்­ளை­யர்­கள் 'கேஸ் கட்டர்' கொண்டு வெல்­டிங் செய்து ஏடி­எம்­களை உடைத்து அதன் பின்­னர் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர். இந்த நான்கு ஏடி­எம்­க­ளி­லும் சேர்த்து சுமார் ரூ.75 லட்­சத்­திற்கு மேல் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என சந்தேகிக்கிறோம். கொள்­ளைக்­குப்பின் தீ வைக்­கப்­பட்­ட­தில் கண்­கா­ணிப்­புக் கேமரா, பதிவு சாத­னங்­கள் முற்­றி­லும் சேத­ம்­அடைந்­துள்­ளன.

"எனவே கொள்­ளை­யர்­களைக் கண்­டு­பி­டிப்­ப­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது," என்று காவல்­து­றை­யி­னர் கூறி­யுள்­ள­னர்.