தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காமராஜர் சிலையை அகற்ற முயற்சி; கடும் எதிர்ப்பு

1 mins read

சென்னை: சென்னை புளி­யந்­தோப்­பில் காம­ரா­ஜர் சிலையை அகற்ற வந்த சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள், கடும் எதிர்ப்பு கிளம்­பி­ய­தால் திரும்­பிச் சென்­ற­னர்.

புளி­யந்­தோப்பு டிக்­காஸ்­டர் சாலை அம்­பேத்­கர் நகர் சந்­திப்­பில் 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அமைக்­கப்­பட்ட மார்­ப­ளவு காம­ரா­ஜர் சிலை சேத­ம­டைந்து இருந்­த­தால் வட­சென்னை மேற்கு மாவட்ட காங்­கி­ரஸ் கட்சி துணைச் செய­லா­ளர் சி.கே.தேவன், அந்­தச் சிலையை அகற்­றி­விட்டு சிறிய பீடம் அமைத்து அதில் ஏழு அடி உய­ரத்­தில் காம­ரா­ஜர் சிலையை அமைத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து சனிக்­கி­ழமை மதி­யம் புளி­யந்­தோப்பு துணை ஆணை­யர் ஈஸ்­வ­ரன், உதவி ஆணை­யர் அழ­கே­சன் தலை­மை­யி­லான காவல்­துறை, சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் காம­ரா­ஜர் சிலையை அகற்ற வந்­த­னர்.

இதை­ய­றிந்த வட­சென்னை மாவட்ட காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர்­கள் டில்­லி­பாபு, திர­வி­யம், பகுதி தலை­வர்­கள் என்.எஸ்.பாஸ்­கர், பாபு­கான் தலை­மை­யில் 50க்கும் மேற்­பட்­டோர் அங்கு கூடி­னர்.

காம­ரா­ஜர் சிலையை அகற்­றக்­கூ­டாது என அவர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

பின்­னர் மாவட்ட ஆட்­சி­யர் மற்­றும் மாந­க­ராட்­சி­யி­டம் முறைப்­படி அனு­மதி பெற்று சிலை திறக்­கப்­படும் என காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் எழுதிக் கொடுக்­கப்­பட்­ட­தால் அதி­கா­ரி­கள் திரும்­பிச் சென்­ற­னர்.