'நான்கு ஏடிஎம் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது'

'நான்கு ஏடிஎம் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது'

2 mins read
35334828-43c3-4128-8678-278063f9f89d
-

திரு­வண்­ணா­மலை: திரு­வண்ணா மலை மாவட்­டத்­தில் அடுத்­த­டுத்து நான்கு இடங்­களில் நடந்­துள்ள ஏடி­எம் கொள்­ளைச் சம்­ப­வங்­கள் குறித்து துப்பு கிடைத்­துள்­ள­தாக காவல்­து­றைத் தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு தெரி­வித்­துள்­ளார்.

"இது­போன்ற சம்­ப­வங்­கள் ஏற்­கெ­னவே அரி­யானா, மகா­ராஷ் டிரா, ஒடிசா, ஆந்­தி­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் நடந் துள்­ளன. பல நாள்­க­ளா­கத் திட்­ட­மிட்டு, கைதேர்ந்த கொள் ளையர்­கள் கைவ­ரி­சை­யைக் காட்டி உள்­ள­னர்," என மேலும் அவர் கூறி­னார்.

இந்­தக் கொள்­ளை­யர்­க­ளைப் பிடிக்க தமி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி, கர்­நா­டகா, கேரள எல்­லை­யோ­ரப் பகு­தி­க­ளி­லும் வாக­னச் சோத னையைக் காவ­லர்­கள் தீவிரப்­படுத்தி உள்­ள­னர்.

அத்­து­டன், ஆந்­தி­ரப்­பி­ர­தே­சம், கர்­நா­ட­கம், கேரளா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளுக்­கும் தனிப்­படை காவ­லர்­கள் விரைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், செய்­தி­யா­ளர் களி­டம் பேசிய ஐஜி கண்­ணன், "திரு­வண்­ணா­ம­லை­யில் மட்­டும் நான்கு ஏடி­எம்­களில் ஏறக் குறைய ரூ.75 லட்­சம் கொள்ளை அடிக்­கப்­பட்­டுள்­ளது. தட­யங்­களை மறைப்­ப­தற்­காக கொள்­ளை­யர்­கள் ஒரு சில ஏடி­எம் இயந்­தி­ரங்­களையும் சிசி­டிவி கேம­ராக்­க­ளை­யும் தீவைத்துக் கொளுத்தி­விட்­டுச் சென்­றுள்­ள­னர். இந்­தக் கொள்­ளை­யர்­க­ளைப் பிடிப்­ப­தற் காக எட்டு தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஓரிரண்டு நாளில் கொள்­ளை­யர்­க­ளைப் பிடித்­து­வி­டு­வோம்," என்­றார்.

"ஏடி­எம் இயந்­தி­ரம் குறித்து நன்கு தெரிந்­த­வர்­களே இந்த கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். ஏடி­எம் இயந்­தி­ரத்தை பழு­து­பார்ப்­ப­வர் கூட கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­டி­ருக்­க­லாம்," என்­றும் அவர் கூறி­னார்.

திரு­வண்­ணா­மலை நக­ரில் பொருத்­தப்­பட்­டி­ருந்த 400 சிசி­டிவி பதி­வு­களை காவ­லர்­கள் ஆய்வு செய்து வரு­கின்­ற­னர்.

"தமிழ்­நாட்­டில் சட்டம்- ஒழுங்கு மிக­வும் மோச­மாகி வரு­வ­தையே இந்­தச் சம்­ப­வங்­கள் காட்­டு­கின்­றன. மக்­க­ளின் உயிர், உடை­மை­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய திமுக அரசு மக்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது?" என அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 48 இடங்களில் சோதனை நடந்தது. கார், லாரி உட்பட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பிறகே செல்ல காவலர்கள் அனுமதித்தனர். படம்: தமிழக ஊடகம்