தாய்லாந்து புத்தபிக்குகளால் புத்தர் கோயில் திறப்பு

தாய்லாந்து புத்தபிக்குகளால் புத்தர் கோயில் திறப்பு

1 mins read

சிவ­கங்கை: சிவ­கங்கை அருகே அமைக்­கப்­பட்­டுள்ள புத்­தர் கோயிலை தாய்­லாந்­தில் இருந்து வந்த புத்­த­பிக்­கு­கள் சடங்­கு­கள் செய்து திறந்து வைத்­த­னர். இவ் விழா­வில் திர­ளான பக்­தர்­கள் பங்­கேற்­ற­னர்.

'அன்பே கட­வுள்' என போதித்த கௌதம புத்­த­ருக்கு பாக­னேரி அண்­ணா­ம­லைச் செட்­டி­யார் குடும்­பத்­தி­னர் தங்­கள் சொந்த இடத்­தில் கோயில் எழுப்பி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து, கோயி­லில் சடங்­கு­க­ளைச் செய்­வ­தற்­காக தாய்­லாந்து நாட்­டி­லி­ருந்து புத்­த­பிக்­கு­கள் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்­குச் செண்டை மேளம் முழங்க வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

ஜெய்ப்­பூ­ரில் இருந்து ஜப்­பா­னிய பாணி­யி­ல் தயாரான புத்­தர் சிலை தரு­விக்­கப்­பட்டு, அதற்கு தாய்­லாந்து புத்­த­பிக்­கு­கள் சடங்­கு­க­ளைச் செய்­த­னர்.

பாக­னே­ரி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்­தப் புத்­தர் கோயி­லுக்கு கடந்த மூன்­றாம் தேதி தமிழ் முறைப்­படி குட­மு­ழுக்கு விழா நடத்­தப்­பட்­டது குறிப்­பிடத்­தக்­கது.

சிவ­கங்கை மாவட்­டத்­தில் எழுப்­பப்­பட்­டுள்ள இந்தப் புத்­தர் கோயில் அப்­ப­குதி மக்­க­ளி­டையே மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.