அன்பர் தினத்தைக் கொண்டாட ஆடு திருடிய இளையர்கள்

அன்பர் தினத்தைக் கொண்டாட ஆடு திருடிய இளையர்கள்

1 mins read
25c68eb5-bb57-4d11-a11b-43e724ecfb1d
-

விழுப்­பு­ரம்: உலகெங்கும் நாளை (பிப்­ர­வரி 14) அன்­பர் தின­மாகக் கொண்­டா­டப்­பட உள்ள நிலை­யில், விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் வசிக்கும் இரு இளையர்கள் தங்­க­ளது அன்பர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ஆட்டைத் திரு­டி காவலர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.

விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்சி பகு­தி­யைச் சேர்ந்­த­வர்களான கல்லூரி மாணவர் அர­விந்த்­குமார், 20, மோகன், 20. நண்­பர்­க­ளான இரு­வ­ரும் அன்பர் தினத்­தைக் கொண்­டாட மிகவும் ஆர்­வ­மாக இருந்­த­னர். அவர்­களிடம் போதிய பணம் இல்­லா­த­தால், ஆடுகளைத் ­திருடி, விற்று அன்பர் தினத்தைக் கொண்­டாட முடிவு செய்­த­னர்.

இதற்­காக விழுப்­பு­ரம் அருகே உள்ள மலை­ய­ர­சன்குப்­பம் பகு­திக்­குச் சென்ற நண்பர்கள் இரு வரும், ரேணுகா என்­ப­வர் தனது பட்டியில் அடைத்து வைத்திருந்த 10 ஆடு­களில் ஒரே ஒரு ஆட்டை மட்­டும் திருடிக்கொண்டு மோட்­டார் சைக்­கி­ளில் புறப்பட்டனர். அப்போது ஆடு கத்­தவே, இந்தச் சத்­தம் கேட்டு ஓடி வந்த ரேணுகா ஊரைக் கூட்டிவிட்டார். இளையர்­களை மடக்கிப் பிடித்து கண்­டாச்­சி­பு­ரம் காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்­ப­டைத்­த­னர்.