பழ.நெடுமாறன்: பிரபாகரன் உயிருடன், நலமாக உள்ளார்; இலங்கை ராணுவம்: அதெல்லாம் இல்லை, ஆதாரம் உள்ளது

பழ.நெடுமாறன்: பிரபாகரன் உயிருடன், நலமாக உள்ளார்; இலங்கை ராணுவம்: அதெல்லாம் இல்லை, ஆதாரம் உள்ளது

2 mins read
79fad5e1-2a30-4a0c-b873-7f3370063601
-

தஞ்­சா­வூர்: தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரு­டன் நல­மாக இருக்­கி­றார் என்­றும் அவர் விரை­வில் மக்­கள்­முன் தோன்­று­வார் என்­றும் தெரி­வித்து, பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார் உல­கத் தமி­ழர் பேர­மைப்­பின் தலை­வர் பழ.நெடு­மா­றன்.

பிரபாகரன் குடும்பத்தின ருடன் எனக்குத் தொடர்பிருக் கிறது. அவரது அனு­ம­தி­யு­டன் தான் இதனை தாம் அறி­விப்­ப­தாகவும் தஞ்­சா­வூ­ரில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் கூறி­னார்.

பிர­பா­க­ர­னின் மனைவி, மகளும் நல­மு­டன் இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அதே­நே­ரத்­தில், அவர்­கள் இப்­போது எங்கே உள்­ள­னர் என்ற தக­வலை இப்­போது வெளி­யிட இய­லாது என்று திரு நெடு­மா­றன் கூறி­னார்.

அனைத்­து­ல­கச் சூழ­லும் இலங்­கை­யில் ராஜ­பக்சே ஆட்­சியை வீழ்த்­தும் அள­வுக்கு வெடித்­துக் கிளம்­பி­யி­ருக்­கும் சிங்­கள மக்­க­ளின் போராட்­டங்­களும் தமி­ழீ­ழ தேசி­யத் தலை­வரை வெளிக்­கொண்டு வருவதற்கு உகந்த சூழலை உரு­வாக்கி உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், பிர­பா­க­ரன் உயி­ரு­டன் இருப்­ப­தாக வெளி­யான செய்­திக்கு மறுப்பு தெரி­வித்­துள்ள இலங்கை ராணு­வம், அவர் ஏற்­கெ­னவே கொல்­லப்­பட்டுவிட்­ட­தாக பிபி­சி­யி­டம் கூறி­யுள்­ளது.

இது­கு­றித்து இலங்கை ராணுவ செய்­தித் தொடர்­பா­ளர் ரவி ஹேரத் பிபிசி தமி­ழி­டம் பேசி­ய­போது, "விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் தற்­போது உயி­ரு­டன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறு­திக்­கட்­டப் போரில் அவர் உயி­ரி­ழந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எங்­க­ளி­டம் உள்­ளன," என்­றார்.

அத்­து­டன், அந்­தக் குறிப்­பிட்ட நேரத்­தில் 'டிஎன்ஏ' என்ற மர­பணு பரி­சோ­தனை உள்­ளிட்ட அனைத்து ஆதா­ரங்­களும் எங்­க­ளி­டம் இருந்­தன.

இப்­போது, தவ­றான தக­வல்­களை வெளி­யி­டு­கின்­ற­னர். இக் கூற்று எங்­க­ளுக்கு எவ்­வித எச்­ச­ரிக்கை மனப்­பாங்கையும் ஏற்­படுத்­த­வில்லை. ஏனெ­னில், அவர் கொல்­லப்­பட்­டு­விட்­டார் என்­பது எங்­க­ளுக்­குத் தெளி­வா­கத் தெரி­யும், அதில் சந்­தே­கமே இல்லை," என்று தெரி­வித்­துள்­ளார்.

"பிரபாகரன் கொல்­லப்­பட்­டு­ விட்­டார் என்­பதில் எந்தச் சந்­தேகமும் இல்லை," எனக் கூறியுள்ள இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத். படம்: இலங்கை ராணுவம் வலைத்தளம்