அதிமுக-பாஜகவிடம் தொடரும் பிணக்கு

அதிமுக-பாஜகவிடம் தொடரும் பிணக்கு

2 mins read

ஈரோடு: ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­தல் பிர­சா­ரம் சூடுபிடித்­துள்ள நிலை­யில், தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை­யு­டன் இணைந்து தேர்­தல் பிர­சா­ரம் செய்­யும் திட்­ட­மில்லை என அதி­முக இடைக்­கா­லப் பொதுச்செய­லா­ளர் எடப்­பாடி பழனி­சாமி தெரி­வித்­துள்­ளார்.

ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லில் இரட்டை இலைச் சின்­னத்­தில் போட்­டி­யிட உள்ள அதி­முக வேட்­பா­ளர் தென் னரசை ஆத­ரிப்­ப­தாக பாஜக அறி­வித்­தி­ருந்த நிலை­யில், தென்­ன­ரசு வாக்­குச் சேக­ரிக்­கும் தருவா யில் பாஜக நிர்­வா­கி­கள் ஒதுங்­கிக்கொள்­வ­தாக தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து, இத்­தேர்­த­லில் கூட்­ட­ணிக் கட்­சி­யான பாஜ­கவை அதி­முக தவிர்த்து வரு­வ­தாகக் கூறப்படுகிறது.

அண்­ணா­ம­லை­யு­டன் சேர்ந்து பிர­சா­ரம் செய்யமாட்­டேன் என்று பழ­னி­சாமி தெரி­வித்­தி­ருப்­பதும் பாஜக­வி­னர் மத்தியில் விவா தத்தை ஏற்­படுத்தி உள்­ளது.

இதனிடையே, முன்­னாள், இந்­நாள் அமைச்­சர்­கள், எம்­எல்­ஏக்­கள் என ஈரோட்டில் முகா­மிட்­டுள்­ள­தால் தேர்­தல் களம் சுறு சு­றுப்­பு­டன் காணப்­ப­டு­கிறது.

இந்த இடைத்­தேர்­த­லுக்கு இன்­னும் இரண்டு வாரங்­களே உள்ள சூழலில், அதி­முக வேட்­பா­ளர் தென்­ன­ரைசை ஆத­ரித்து பிப்­ர­வரி 15, 16, 17, 24, 25 ஆகிய ஐந்து நாள்­கள் பழனிசாமி­யும் பிப்ரவரி 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் அண்­ணா­ம­லை­யும் பிர­சா­ரம் மேற்­கொள்ள உள்­ள­னர்.

ஈவி­கே­எஸ் இளங்­கோ­வன் பிர­சா­ரம் செய்தபோது, "சாதி­யின் பெய­ரால் மதத்­தின் பெய­ரால் மக்களைப் பிரிக்க நினைப்­ப­வர்­களுக்கு இத்தேர்­த­லில் தக்க பதி­லடி தரவேண்­டும்," என மக் களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

"திமுகவினர் ஆளுங்கட்சியாக இருப்பதால் செலவிலும் தாராளம் காட்டுகின்றனர். இதற்கு அதிமுகவினரால் ஈடுகொடுக்க முடியாத நிலை உள்ளது. எனினும், தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் இரு கட்சியினரிடமும் கடும் போட்டி நிலவிவருகிறது," என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.